அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள்

அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது தொடங்ககூடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்று பலருக்கும் தெரிவதில்லை. அஷ்டமி, நவமி திதிகள் ஆகாத நாட்கள் என சொல்லி வைத்துள்ளர்கள் முன்னோர்கள். அது எதற்கு என்று இந்த பதிவில் விஞ்ஞான ரீதியாகவும், புராண ரீதியாகவும் பார்க்கலாம்.

அஷ்டமி நவமி திதிகள்

புராண ரீதியாக அஷ்டமி, நவமி

சிவபெருமான் திதிகளை படைத்து அவற்றிற்கு அவற்றின் வேலைகள் மற்றும் குணங்களை பற்றி விளக்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அஷ்டமி திதியும், நவமி திதியும் சிவபெருமான் சொல்வதை கவனிக்காமல் இருந்தனவாம். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் அவற்றிற்கு சாபம் கொடுத்தாராம். அதாவது மக்கள் உங்கள் திதி வரும் நாளில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள், எந்த விஷயத்தையும் தொடங்கமாடர்கள், உங்களை ஒதுக்கி வைப்பார்கள் என சாபம் கொடுத்தாராம்.

இதனால் கலக்கமுற்ற அஷ்டமி, நவமி திதிகள் சிவபெருமானிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டின. ஆனால் சிவபெருமானோ கொடுத்த சாபம் கொடுத்ததுதான், வேண்டுமானால் மகாவிஷ்ணுவை போய் பாருங்கள் அவர் உங்கள் சாபம் தீர எதாவது செய்வார் என்றாராம். உடனே அவைகள் மஹாவிஷ்ணுவிடம் சென்று தாங்கள் சபிக்கப்பட்டதை சொல்லி அவரிடம் வருத்தப்பட்டன.

உடனே மகாவிஷ்ணு அவைகளிடம் “வருத்தப்படாதீர்கள். நான் உங்கள் திதிகளில் அவதாரம் செய்கின்றேன்” எனக் கூறி அவற்றை சமதானப்படுதினார். அவர் சொன்னபடியே நவமி திதியில் ராமர் அவதாரம் எடுத்தார். அதே போல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். இதைதான் நாம் ஸ்ரீராமநவமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இந்த அஷ்டமி, நவமி திதிகளை மட்டும்தான் மக்கள் கொண்டாடுகின்றனர்.

அஷ்டமி, நவமி திதிகளை மக்கள் புறக்கணிக்க காரணம்

கடவுள் அவதாரங்களான ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் பூவுலக வாழ்வில் கஷ்டங்கள் பல பெற அவர்கள் அவதரித்த அஷ்டமி, நவமி திதிகள் தான் காரணம் என மக்கள் நம்ப தொடங்கினர். இதற்கு காரணம் கடவுள் அவதாரங்களையே இந்த திதிகள் பாடாய்படுத்திவிட்டது, நாமெல்லம் எம்மாத்திரம் என நினைக்க தொடங்கியதே. இதனால் தான் இன்று வரை அஷ்டமி, நவமி திதிகளில் எந்த நல்ல காரியங்களும் செய்வதும் இல்லை, தொடங்குவதும் இல்லை.

விஞ்ஞான ரீதியாக அஷ்டமி, நவமி

நம் முன்னோர்கள் எதை சொன்னாலும் அதில் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. அஷ்டமி நவமி திதி வரும் நாட்களை ஏன் தவிர்க்க சொன்னார்கள் என்பதை விஞ்ஞான ரீதியாக விரிவாக பார்க்கலாம்.

பூமி தன்னைத்தானே சுற்றி வருவதற்கு ஒரு நாள் ஆகிறது. அதே பூமியானது சூரியனை சுற்றி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியை சுற்றி வருவதற்கு ஒரு மாதம் (30 நாட்கள்) ஆகும். அப்படிபட்ட நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வரும்போது ஒரு பாதி சுற்றை (15 நாட்கள்) அமாவாசை என்றும், அடுத்த பாதி சுற்றை (15 நாட்கள்) பௌர்ணமி என்றும் கூறுகிறோம்.
அமாவாசை, மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட நாளான 8வது நாள் அஷ்டமி என்றும், 9வது நாள் நவமி என்றும் சொல்கிறோம். இதன்படி ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமிகளும், இரண்டு நவமிகளும் வரும். இதை தேய்பிறை அஷ்டமி, நவமி என்றும் வளர்பிறை அஷ்டமி, நவமி என்றும் சொல்கிறோம்.

அஷ்டமி தினம் வரும் நாளன்று (8வது நாள்) நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே வருகிறது. அந்நேரத்தில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் பூமியில் ஒருவித அதிர்வலைகள் ஏற்படுகிறது. அந்த அதிர்வலைகள் பூமியில் உள்ள அனைத்து உயிர்களிடமும் எதிரொலிக்கும். அந்த நேரத்தில் எந்த உயிராலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது. அந்நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் நிலையில்லாமல் இருக்கும்.

நவமி தினம் (9வது நாள்) முடிந்த பிறகே சந்திரன் பூமியை விட்டு விலகி தன் இயக்கத்தை தொடரும், பூமியும் தனது இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பும். அப்போது தான் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களின் மனமும் ஒரு நிலைக்கு வரும். அதனால் தான் அஷ்டமி தினம் அன்றும், நவமி தினம் அன்றும் எந்த முக்கியமான முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதனால் தான அஷ்டமி மற்றும் நவமி திதிகள் சுபகாரியங்களுக்கு ஏற்றது இல்லை என முன்னோர்கள் சொன்னார்கள்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
எண் கணிதம் எப்படி பார்ப்பது

எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதத்தை பார்ப்பது எப்படி?

எண் கணிதம் நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். 'எண்களை'...
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.