சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன்

அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய முறையில் சமைப்பவர்களும் உண்டு, மேற்கத்திய மற்றும் சீனா உணவு முறையில் சமைப்பவர்களும் உண்டு. நாம் இன்று பார்க்க இருப்பது சீன முறையில் தயார் செய்யப்படும் சிக்கன் மஞ்சூரியன் உணவாகும்.

சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

தேவையான பொருட்கள்

சிக்கன் பொரிப்பதற்கு

1. சிக்கன் – ¼ கிலோ (எலும்பில்லாதது)
2. இஞ்சி பூண்டு விழுது – 1 Tbs
3. சோளமாவு – 100 கி.
4. மிளகாய் சாஸ் – 2 Tbs
5. முட்டை – 1
6. மைதா – 1 Tbs
7. எண்ணெய் – தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு

கிரேவி செய்வதற்கு

1. பூண்டு – 10 பல் ( பொடியாக நறுக்கியது )
2. பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
3. குடைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
4. கிராம்பு – 2 No’s
5. தக்காளி சாஸ் – 1 Tbs
6. சோயா சாஸ் – 1 Tbs
7. சோள மாவு – 1 டீTbs
8. மிளகாய் சாஸ் – 2 Tbs
9. எலுமிச்சைச்சாறு – 2 Tbs
10. கொத்தமல்லி தழை – சிறிதளவு
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

1. முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 முட்டையை உடைத்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. முட்டையை கலந்த பின்பு அதில் 1 Tbs இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு கலக்கி கொள்ளவும்.
4. கலக்கிய பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். இந்த சிக்கனை ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
5. சிக்கனை பொரிக்க ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
6. ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
7. ஒரு கடாயில் 2 Tbs எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
8. நன்கு வதங்கியதும் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளவும்.
9.பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும். சிக்கனை சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு கிளறி விடவும்.
10. 1 Tbs சோளமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கிரேவியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
11. தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
12. 2 நிமிடம் கழித்து மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
நரை முடி வராமல் தடுக்க

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ் நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். உணவு பழக்க வழக்கத்தில் சில...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.