சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன்

அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய முறையில் சமைப்பவர்களும் உண்டு, மேற்கத்திய மற்றும் சீனா உணவு முறையில் சமைப்பவர்களும் உண்டு. நாம் இன்று பார்க்க இருப்பது சீன முறையில் தயார் செய்யப்படும் சிக்கன் மஞ்சூரியன் உணவாகும்.

சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

தேவையான பொருட்கள்

சிக்கன் பொரிப்பதற்கு

1. சிக்கன் – ¼ கிலோ (எலும்பில்லாதது)
2. இஞ்சி பூண்டு விழுது – 1 Tbs
3. சோளமாவு – 100 கி.
4. மிளகாய் சாஸ் – 2 Tbs
5. முட்டை – 1
6. மைதா – 1 Tbs
7. எண்ணெய் – தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு

கிரேவி செய்வதற்கு

1. பூண்டு – 10 பல் ( பொடியாக நறுக்கியது )
2. பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
3. குடைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
4. கிராம்பு – 2 No’s
5. தக்காளி சாஸ் – 1 Tbs
6. சோயா சாஸ் – 1 Tbs
7. சோள மாவு – 1 டீTbs
8. மிளகாய் சாஸ் – 2 Tbs
9. எலுமிச்சைச்சாறு – 2 Tbs
10. கொத்தமல்லி தழை – சிறிதளவு
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

1. முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 முட்டையை உடைத்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. முட்டையை கலந்த பின்பு அதில் 1 Tbs இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு கலக்கி கொள்ளவும்.
4. கலக்கிய பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். இந்த சிக்கனை ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
5. சிக்கனை பொரிக்க ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
6. ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
7. ஒரு கடாயில் 2 Tbs எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
8. நன்கு வதங்கியதும் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளவும்.
9.பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும். சிக்கனை சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு கிளறி விடவும்.
10. 1 Tbs சோளமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கிரேவியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
11. தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
12. 2 நிமிடம் கழித்து மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி : மேஷம். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி : கேது. அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை – சரஸ்வதி அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...
விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசி பொது பலன்கள் – விருச்சிக ராசி குணங்கள்

விருச்சிக ராசி குணங்கள் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. இவர்களுக்கு எத்தனை...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.