நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி

நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் நவமி தினம் கிருஷ்ண பட்ச நவமி என்றும் அழைக்கபடுகிறது.

நவமி திதியின் சிறப்புகள்

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தாலும் அதில் ராம அவதாரம் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அத்தகைய இராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ‘இராம நவமி’ என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நவமி திதி

 

நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

நவமி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தி உடையவர்கள். இவர்களுக்கு மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசம் இருக்காது. எதிர் பாலினத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். புகழ் பெறுவதில் ஆர்வம் இருக்கும். எதிர்ப்பை கண்டு அஞ்சதவர்களாக இருப்பார்கள், கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள், விருப்பம் போல வாழக்கூடியவர்கள்.

நவமி திதியில் என்னென்ன செய்யலாம்

நவமி திதியின் தெய்வம் அம்பிகையாகும். இந்நாளில் எதிரிகளை வெல்லுதல், தெய்வங்களுக்கு பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவை செய்யலாம். புதிய வேலைகளுக்கு செல்லலாம், நல்ல காரியங்கள் செய்யலாம், நகைகள், ஆடைகள் வாங்கலாம், தர்ம காரியங்கள் செய்யலாம், ஆயுதங்கள் செய்தல் மற்றும் உபயோகித்தல், செங்கல் சூளைக்கு நெருப்பு இடுதல் போன்றவை செய்யலாம்.

நவமி திதியில் என்ன செய்யக்கூடாது

நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் எழும். எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நவமி திதிக்கான பரிகாரங்கள்

நவமி திதி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வேளையில் ஈடுபட்டால் அனைத்து காரியங்களும் சுமுகமாக நடைபெறும். ராமநவமி விரதம் இருந்து ராமனை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் ஆசி கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

நவமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

நவமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகும்.

நவமி திதிக்கான தெய்வங்கள்

நவமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் சரஸ்வதி

நவமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் சரஸ்வதி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

லக்ஷ்மி குபேர வழிபாடு

குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்?

குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே குறிப்பிடுகிறோம். செல்வத்தை வேண்டி மகாலட்சுமியை வணங்கும் போது அவருடைய பரிபூரண அருளை பெற்ற குபேரனையும் சேர்த்து வழிபடுவதால் நமக்கு இரட்டிப்பு...
பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது சரியா

பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைப்பது ஏன்?

பாம்பு புற்றுக்கு பால், முட்டை கோவில்கள், வயல்வெளிகள் ஆகியவற்றில் பாம்பு புற்று இருப்பதை பார்த்திருப்போம். பாம்பு புற்றுக்கு பால் மற்றும் முட்டை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். நம் முன்னோர்கள் பாம்பிற்குப் பால் மற்றும் முட்டை வைப்பார்கள்....
தீ விபத்துக்கான முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை...
ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
carrot halwa recipe

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரிப் பருப்பு 6.உலர்ந்த திராட்சை நெய் செய்முறை காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். ...
புலி கனவு பலன்கள்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு....
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.