நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி

நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் நவமி தினம் கிருஷ்ண பட்ச நவமி என்றும் அழைக்கபடுகிறது.

நவமி திதியின் சிறப்புகள்

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தாலும் அதில் ராம அவதாரம் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அத்தகைய இராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ‘இராம நவமி’ என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நவமி திதி

 

நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

நவமி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தி உடையவர்கள். இவர்களுக்கு மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசம் இருக்காது. எதிர் பாலினத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். புகழ் பெறுவதில் ஆர்வம் இருக்கும். எதிர்ப்பை கண்டு அஞ்சதவர்களாக இருப்பார்கள், கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள், விருப்பம் போல வாழக்கூடியவர்கள்.

நவமி திதியில் என்னென்ன செய்யலாம்

நவமி திதியின் தெய்வம் அம்பிகையாகும். இந்நாளில் எதிரிகளை வெல்லுதல், தெய்வங்களுக்கு பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவை செய்யலாம். புதிய வேலைகளுக்கு செல்லலாம், நல்ல காரியங்கள் செய்யலாம், நகைகள், ஆடைகள் வாங்கலாம், தர்ம காரியங்கள் செய்யலாம், ஆயுதங்கள் செய்தல் மற்றும் உபயோகித்தல், செங்கல் சூளைக்கு நெருப்பு இடுதல் போன்றவை செய்யலாம்.

நவமி திதியில் என்ன செய்யக்கூடாது

நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் எழும். எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நவமி திதிக்கான பரிகாரங்கள்

நவமி திதி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வேளையில் ஈடுபட்டால் அனைத்து காரியங்களும் சுமுகமாக நடைபெறும். ராமநவமி விரதம் இருந்து ராமனை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் ஆசி கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

நவமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

நவமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகும்.

நவமி திதிக்கான தெய்வங்கள்

நவமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் சரஸ்வதி

நவமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் சரஸ்வதி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில்...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், விவேகம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்? மேஷம் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து...
கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.