பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திர திருவிழாவும், அதேபோல் இந்த பங்குனி மாதத்தில் தான் அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமான தினமும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் தன்னுடைய பேச்சால் கவரக்கூடிய ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதில் உள்ளதை எளிதில் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை செய்யும் தொழிலே தெய்வம் என நினைப்பார்கள். கற்பனை வளம் அதிகம் நிறைந்தவர்கள் இவர்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் தன் வசப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆற்றல் நிறைந்தவர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால், இவர்களின் முகபாவங்களை வைத்து எதையும் அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள இயலாது. இவர்களுக்கு ரகசியங்களை மறைக்க தெரியாது. எளியவர்களிடமும், வாயில்லாப் பிராணிகளிடமும் மிகுந்த இரக்க காட்டுவார்கள்.

இவர்கள் பிறருக்கு அவ்வளவு எளிதில் வாக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவார்கள். இவர்கள்கு எதிரிகளை திட்டமிட்டு வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் செல்வதில் விருப்பம் இருக்கும். எதையும் முறையாக திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். இயற்கைக் காட்சிகளை விரும்பி ரசிப்பார்கள்.

உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதே போல வெகு எளிதில் மனத் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். இவர்களின் பேச்சில் கனிவும், கண்டிப்பும் இருக்கும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவதில் மற்றும் பணி புரிவதில் வல்லவர்கள். இவர்கள் சதா எந்நேரமும் பல்வேறு விதமான எண்ணங்களில் மூழ்கி இருப்பார்கள். தம்மைச் சார்ந்தவர்களை எல்லாவகையிலும் திருப்தியடையும்படி செய்வார்.

குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். எப்போதும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதால் இவர்களிடம் சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கும். இவர்கள் ஒரு சில விஷயங்களில் அடங்கி போவார்கள். இவர்கள் பதுங்குவது பாய்வதற்கு தான். எவ்வளவு சோதனை வந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். அதே போல எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள். இவர்கள் அடிக்கடி தம்முடைய லட்சியங்களை மாற்றிக்கொள்வார்கள்.

இவர்களிடம் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எந்த ஒரு விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் புகழ்ச்சிக்கு ஆசைபடுபவர்கள். ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்களின் இளமை வாழ்க்கை வறுமை நிறைந்ததாக இருக்கும். ஆனால் 40 வயதிற்கு மேல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். வெகு சீக்கிரத்தில் யாவரையும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கிக்கொள்வர். இவரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்குவது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். மற்றவர் சுகத்தைத் தன் சுகமாக கருதும் உயர்ந்த பண்பு கொண்டவர்கள் இவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.