சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்கள் எழுதி வைத்த ஓலைச்சுவடியில் உள்ள மருத்துவ குறிப்புகளின் படி மனித உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்துகள் உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது  என்பது ஆதாரபூர்வமானமான உண்மை.

சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்பது ஒரு மூலிகை மருத்துவம் (Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் இன்றளவும் உள்ளது. சில சமுக ஊடகங்கள் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில வகை மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என கூறுகின்றன. இது முற்றிலும் தவறான கருத்து. சித்த மருத்துவம் என்பது வெறும் மூலிகைகளை மட்டும் கொண்டது அல்ல. சித்த மருத்துவத்தில் கீழ்கண்ட பொருட்களும் உபயோகப்படுத்தபடுகின்றன.

சித்த மருத்துவ பொருட்கள் 

சித்த மருத்துவத்தில் மூலிகைகள் தவிர, உலோகங்கள், உப ரசங்கள், தாது உப்புக்கள், நவமணிகள், பஞ்சசூதப் பாசாணங்கள் (Arsenic), மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் கந்தகம், வெள்ளைப் பாசாணம், மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தாது உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு (Rock Salt), கல்லுப்பு, சீனாக்காரம் (Aluminum potassium sulphate), சூடம் (camphor), நவச்சாரம் (Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு (Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் 120 வகையான உபரசங்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த பாதரசம், ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.

பக்க விளைவுகள் ஏற்படாது 

சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருப்போம். இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால், அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாதா? பாதுகாப்பானதா? என நீங்கள் சிந்திக்கலாம். இதற்கான விடை சித்த மருத்துவம் என்பது நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனெனில் ஒவ்வொரு மருந்து பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் அது முழுமையாக சுத்தி (Purification) செய்யப்படுகிறது. அதாவது மூலபொருட்களிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் ‘சுத்தி’ எனப்படுகிறது.

சித்த மருத்துவ மூலிகைகள்
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள் (Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகளாகும்.

இது தவிர உயிரினங்களிலிருந்து மருந்து பொருட்களை தயாரித்து பயன்படுத்துகிறது சித்த மருத்துவம். உதாரணத்திற்கு ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவையும் சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தின் உண்மை இவ்வாறு கடல் அளவு இருக்க ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்கள் மிகவும் தவறானது. இனி அடுத்து வரும் கட்டுரைகளில் ஒவ்வொரு சித்த மருந்தின் பயன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...
coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.