மூட்டு வலியை குணப்படுத்தும் முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய், பக்கவாதம்  போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

முடக்கத்தான் பயன்கள் தேவையான பொருட்கள்

  1. முடக்கத்தான்  – ஒரு கட்டு
  2. புளி – சிறிதளவு
  3. உப்பு – தேவையான அளவு
  4. பூண்டு – 10 பல்
  5. காய்ந்த மிளகாய் – 6
  6. இஞ்சி – சிறிய துண்டு
  7. சீரகம் – ½ ஸ்பூன்
  8. மிளகு – ½ ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  10. கடுகு – 1 ஸ்பூன்
  11. உளுந்து – 1 ஸ்பூன்
  12. பெருங்காயத் தூள் – சிறிதளவு

செய்முறை

  1. முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சீரகம்,மிளகு,பூண்டு, காய்ந்த‌ மிளகாய், இஞ்சி, சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதனுடன் சுத்தம் செய்த‌ முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கிய பின் இறக்கி ஆற விடவும்.
  6. சூடு ஆறியவுடன் மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  7. பின்னர் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  8. எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
  9. தாளித்த பின் அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் விழுது சேர்த்து சிறிதளவு பெருங்காய‌ தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  10. எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி இறக்கினால் சுவையான முடக்கத்தான் துவையல் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
நவகிரக தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை

செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை...
ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.