இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல்

இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட இறாலை வைத்து இறால் சீஸ் ரோல் செய்வது எப்படி என பார்ப்போம்.

இறால் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்

சப்பாத்தி செய்ய

  1. கோதுமை மாவு – 2 கப்
  2. எண்ணெய் – சிறிதளவு
  3. தண்ணீர் – தேவையான அளவு (வெதுவெதுப்பான நீர் )
  4. உப்பு – தேவையான அளவு

ஸ்டஃப்பிங் செய்ய

  1. இறால் – 250 கிராம்
  2. சீஸ் – 100 கிராம்
  3. பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  4. தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது )
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. குடைமிளகாய் – 1/4 கப்
  7. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் – ½ ஸ்பூன்
  9. சிக்கன் மசாலாத்தூள் – ½ ஸ்பூன்
  10. மல்லித்தழை – சிறிதளவு ( பொடியாக நறுக்கியது )
  11. வெண்ணெய் – சிறிதளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
  2. கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய், கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. 2 மணி நேரத்திற்கு பின் ஊறிய மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் சப்பாத்திக் கட்டையில் வைத்து தேய்த்து எடுக்கவும்.
    பின்னர் சப்பாத்தியை தோசைக் கல்லில் பொட்டு சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    ஸ்டப்பிங் செய்வதற்கு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கவும்.
  6. பின் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. குடைமிளகாய் வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
  9. இறால் சிறிதளவு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  10. மசாலாவின் பச்சை வாசனை போன பின் சிரிதளவு தண்ணீர் தெளித்து கலந்து விடவும்.
  11. கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
  12. இப்போது சுட்டு வைத்துள்ள சப்பாத்தியில் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதற்க்கு மேல் இறால் கலவையை வைக்கவும்.
    பின்னர் அதன் மேல் சீஸ் துருவல் சேர்த்து ரோல் செய்து பரிமாறவும்.
    சுவையான இறால் சீஸ் ரோல் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு...
பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...
ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
ஆடி செவ்வாய் வழிபாடு

ஆடிச் செவ்வாயும் ஔவையார் விரதமும்

ஆடிச் செவ்வாய் விரதம் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். மற்ற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் தான் அம்மனுக்கு வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.