தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ
  2. மட்டன் கறி – ½ கிலோ
  3. பெரிய வெங்காயம் – 3 ( பெரியது )
  4. தக்காளி – 2 ( பெரியது )
  5. பச்சை மிளகாய் – 2
  6. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  7. தயிர் – 1 கப்
  8. தனி மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
  9. மல்லித் தூள் – 2 ஸ்பூன்
  10. பட்டை – 3 துண்டு
  11. கிராம்பு – 2
  12. ஏலக்காய் – 2
  13. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. நெய் – தேவையான அளவு
  16. உப்பு – தேவையான அளவு
  17. புதினா – சிறிதளவு
  18. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

  1. மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. அரிசியை 2 முறை கழுவிய பின் அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  6. தாளித்த பின் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வதங்கியதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  8. தக்காளி நன்கு கரைந்து வதங்கியவுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  9. இத்துடன் 4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பின் 1 கப் தயிர், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.
  10. அத்துடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  11. இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்துக் கொள்ளவும். மட்டனை சேர்த்து ஒரு 5 நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.
  12. மசாலாவும் மட்டனும் இரண்டற கலக்கும் விதம் நன்கு கிளறி விடவும்.
  13. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி பொட்டு கொதிக்க விடவும்.
  14. நன்கு கொதிக்கும் நேரத்தில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
  15. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  16. மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
  17. 20 நிமிடத்திற்கு பின் மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை , கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான தலப்பாகட்டு மட்டன் பிரியாணி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள் முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.