தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ
  2. மட்டன் கறி – ½ கிலோ
  3. பெரிய வெங்காயம் – 3 ( பெரியது )
  4. தக்காளி – 2 ( பெரியது )
  5. பச்சை மிளகாய் – 2
  6. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  7. தயிர் – 1 கப்
  8. தனி மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
  9. மல்லித் தூள் – 2 ஸ்பூன்
  10. பட்டை – 3 துண்டு
  11. கிராம்பு – 2
  12. ஏலக்காய் – 2
  13. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. நெய் – தேவையான அளவு
  16. உப்பு – தேவையான அளவு
  17. புதினா – சிறிதளவு
  18. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

  1. மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. அரிசியை 2 முறை கழுவிய பின் அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  6. தாளித்த பின் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வதங்கியதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  8. தக்காளி நன்கு கரைந்து வதங்கியவுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  9. இத்துடன் 4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பின் 1 கப் தயிர், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.
  10. அத்துடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  11. இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்துக் கொள்ளவும். மட்டனை சேர்த்து ஒரு 5 நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.
  12. மசாலாவும் மட்டனும் இரண்டற கலக்கும் விதம் நன்கு கிளறி விடவும்.
  13. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி பொட்டு கொதிக்க விடவும்.
  14. நன்கு கொதிக்கும் நேரத்தில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
  15. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  16. மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
  17. 20 நிமிடத்திற்கு பின் மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை , கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான தலப்பாகட்டு மட்டன் பிரியாணி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆண் தலை மச்ச பலன்கள்

ஆண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் தலை பகுதி மச்ச பலன்கள் சாமுத்திரிகா லட்சணத்தின்படி ஆணின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் பலன்களை கூறுகிறது. அந்த வகையில் இந்த பகுதியில் ஆணின் தலை,...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன் பூராடம் நட்சத்திரத்தின் பரிகார...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.