சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. சுவையான சுறா புட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சுறா புட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. சுறா மீன் – 1/2 கிலோ
  2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
  3. பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )
  4. இஞ்சி – 1 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )
  5. பச்சை மிளகாய் – 3 ( பொடியாக நறுக்கியது )
  6. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – ½ ஸ்பூன்
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. கறிவேப்பிலை – சிறிதளவு
  13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  14. கடுகு – ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை நீக்கி கழுவி பின் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சுறா மீனை நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
  3. இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
  4. மீனின் தோலை நன்கு சுத்தம் செய்து எடுத்து விட்டு மீனை 2 முறை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  5. மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
  7. மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
  8. மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும்.
  9. இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
  10. அரை மணி நேரம் ஆன பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
  11. எண்ணெய் காய்ந்ததும்  கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  12. பின் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  13. வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  14. வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  15. 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
  16. 10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
  17. இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா செய்வது எப்படி

சிக்கன் சால்னா செய்வது எப்படி ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது தேவையான பொருட்கள் கோழிக்கறி - ½ கிலோ ...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...
கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
பஞ்சபூதங்கள் கனவில் வந்தால்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் கனவு என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும். எந்த மாதிரியான கனவுக்கு என்ன பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் முற்காலங்களில் சொல்லி வைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சபூதங்கள்...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...
உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.