சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. சுவையான சுறா புட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சுறா புட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. சுறா மீன் – 1/2 கிலோ
  2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
  3. பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )
  4. இஞ்சி – 1 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )
  5. பச்சை மிளகாய் – 3 ( பொடியாக நறுக்கியது )
  6. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – ½ ஸ்பூன்
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. கறிவேப்பிலை – சிறிதளவு
  13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  14. கடுகு – ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை நீக்கி கழுவி பின் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சுறா மீனை நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
  3. இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
  4. மீனின் தோலை நன்கு சுத்தம் செய்து எடுத்து விட்டு மீனை 2 முறை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  5. மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
  7. மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
  8. மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும்.
  9. இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
  10. அரை மணி நேரம் ஆன பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
  11. எண்ணெய் காய்ந்ததும்  கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  12. பின் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  13. வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  14. வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  15. 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
  16. 10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
  17. இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
அமாவாசை திதி

அமாவாசை திதி பலன்கள், அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

அமாவாசை திதி அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த...
நவகிரக தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை

செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை...
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி : மேஷம். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி : கேது. அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை – சரஸ்வதி அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.