சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. சுவையான சுறா புட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சுறா புட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. சுறா மீன் – 1/2 கிலோ
  2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
  3. பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )
  4. இஞ்சி – 1 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )
  5. பச்சை மிளகாய் – 3 ( பொடியாக நறுக்கியது )
  6. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – ½ ஸ்பூன்
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. கறிவேப்பிலை – சிறிதளவு
  13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  14. கடுகு – ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை நீக்கி கழுவி பின் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சுறா மீனை நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
  3. இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
  4. மீனின் தோலை நன்கு சுத்தம் செய்து எடுத்து விட்டு மீனை 2 முறை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  5. மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
  7. மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
  8. மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும்.
  9. இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
  10. அரை மணி நேரம் ஆன பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
  11. எண்ணெய் காய்ந்ததும்  கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  12. பின் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  13. வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  14. வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  15. 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
  16. 10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
  17. இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
நட்சத்திர கணங்கள்

நட்சத்திர கணங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்

நட்சத்திர கணங்கள் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான கணங்கள் பற்றிய சில பொதுவான விஷயங்கள் குறித்து இப்பகுதியில் சற்று விரிவாக பார்ப்போம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம்...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.