தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு

ஆட்டு தல கறி குழம்பு தேவையான பொருட்கள்

  1. ஆட்டுத்தலை – 1
  2. தேங்காய் – ½ கப்
  3. சின்ன வெங்காயம் – 1 கப்
  4. தக்காளி – 2
  5. உப்பு – தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  11. காய்ந்த மிளகாய் – 2
  12. சீரகம் – ¼ ஸ்பூன்
  13. சோம்பு  – ¼ ஸ்பூன்
  14. கறிவேப்பிலை – சிறிதளவு
  15. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

  1. ஆட்டுத்தலையை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், சோம்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை பொட்டு தாளிக்கவும்.
  4. தாளித்தவுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  9. வெட்டி வைத்துள்ள தலைகறியை சேர்த்துக் கொள்ளவும்.
  10. கறியுடன் மசாலாவை நன்கு கலந்து விடவும்.
  11. ½ கப் தேங்காயை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  12. அத்துடன் சிரிதளவு சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  13. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  14. அரைத்த தேங்காய் விழுதை கறியுடன் சேர்த்து கொள்ளவும்.
  15. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  16. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  17. குக்கரை மூடி 4 முதல் 5 விசில் விட்டு இறக்கினால் சுவையான தலைக்கறி குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
prawn recipe

இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ வடித்த சாதம்  - 2 கப் ( பாஸ்மதி அரிசி ) வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது ) ...
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
sinus remedies

சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், மற்றும் அதற்கான தீர்வுகள்

சைனஸ் பாதிப்பிற்கான தீர்வுகள் சைனஸ் என்றால் என்ன ? சைனஸ் என்பது மூக்கின் இரு பக்கங்களிலும் சளி நிறைந்து இருப்பதே ஆகும். இது ஒரு விதமான ஒவ்வாமையாகும். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.