ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி

ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும் பாதிப்புகள் குறையும், உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்யும். சுவையான ஆட்டுக் குடல் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

போட்டிக் குழம்பு தேவையான பொருட்கள்

  1. ஆட்டு கறி குடல் – 500 கிராம்
  2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
  3. தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
  4. தேங்காய் துருவல்  – 1 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. பட்டை – 1 துண்டு
  7. கிராம்பு – 2
  8. சோம்பு – 1 ஸ்பூன்
  9. கசகசா – 1 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  11. மல்லித்தூள் – 1 ஸ்பூன்
  12. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  13. உப்பு  – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

  1. முதலில் ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஆட்டுக் குடலை சுத்தம் செய்யும் போது சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
  3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  6. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வரும் வரை வதக்கவும்.
  8. வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  9. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வர நன்கு வதக்கி கொள்ளவும்.
  10. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
  11. மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  12. இப்போது சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துள்ள ஆட்டு குடலை இத்துடன் சேர்க்கவும்.
  13. ஆட்டுக் குடலை சேர்த்து நன்கு வதக்கவும்
  14. ஆட்டுக் குடலுடன் மசாலா நன்கு சேரும் வரை வதக்கி விடவும்.
  15. ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  16. அரைத்த தேங்காய் மசாலாவை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
  17. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
  18. விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறினால் சுவையான ஆட்டுக் குடல் குழம்பு தயார்.
  19. இந்த ஆட்டுக் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தீ விபத்துக்கான முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை...
சுவையான மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க...
அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள்

அக்கரகாரம் மூலிகை பயன்கள்

அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும்,...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள்,...
tamil brain games

Most intelligent riddles | puthirgal with Answers | Brain Teasers

மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்வி பதில்கள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.