ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி

ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும் பாதிப்புகள் குறையும், உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்யும். சுவையான ஆட்டுக் குடல் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

போட்டிக் குழம்பு தேவையான பொருட்கள்

  1. ஆட்டு கறி குடல் – 500 கிராம்
  2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
  3. தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
  4. தேங்காய் துருவல்  – 1 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. பட்டை – 1 துண்டு
  7. கிராம்பு – 2
  8. சோம்பு – 1 ஸ்பூன்
  9. கசகசா – 1 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  11. மல்லித்தூள் – 1 ஸ்பூன்
  12. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  13. உப்பு  – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

  1. முதலில் ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஆட்டுக் குடலை சுத்தம் செய்யும் போது சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
  3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  6. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வரும் வரை வதக்கவும்.
  8. வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  9. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வர நன்கு வதக்கி கொள்ளவும்.
  10. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
  11. மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  12. இப்போது சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துள்ள ஆட்டு குடலை இத்துடன் சேர்க்கவும்.
  13. ஆட்டுக் குடலை சேர்த்து நன்கு வதக்கவும்
  14. ஆட்டுக் குடலுடன் மசாலா நன்கு சேரும் வரை வதக்கி விடவும்.
  15. ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  16. அரைத்த தேங்காய் மசாலாவை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
  17. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
  18. விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறினால் சுவையான ஆட்டுக் குடல் குழம்பு தயார்.
  19. இந்த ஆட்டுக் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன? ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் 'ல' என்றும் 'ராசி' என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.