காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

 

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும் போது, அன்று நல்ல நாளாக அமைய வேண்டும், மகிழ்ச்சிகரமான நாளாக அமைய வேண்டும் என்று எண்ணுவது வாடிக்கையான ஒன்று. இரவு தூங்கி  மறுநாள் எழுவோம் என்பது நிச்சயம் இல்லாத ஒன்றாகும். ஒவ்வொரு நாள் தூங்கி எழுவதும் நாம் புதிதாக பிறப்பதற்கு சமமாகும். எனவே ஒவ்வொரு நாளையும் நாம் புதிய நாளாகவே கருத வேண்டும்.

ஆழ்ந்த தூக்கம் என்பது மரணத்திற்கு நிகரான ஒன்றாகும். ஏன் என்றால் நாம் தூங்கும் போது அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற நினைவே இல்லாமல் இருக்கும். எனவே நாம் தூங்கி எழும் ஒவ்வொரு நாளும் புதிய நாளாகும்.

அவ்வாறு நாம்  தூங்கி எழும் போது நாம் பார்க்கும் முதல் விஷயம் நல்லதாக அமைய வேண்டும். காலையில் எழுந்தவுடன் சில பொருட்களை பார்ப்பதால் அன்றைய நாள் புத்துணர்வுடன் இருக்கும் என்று கூறுவார்கள். நாம் எழுந்தவுடன் எதை பார்க்கின்றோமோ அதன் தாக்கம் அந்த நாள் முழுவதும் இருக்கும்.

காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டியவை

உள்ளங்கை தரிசனம்

  • காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு உள்ளங்கையை பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் சிறப்பாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். ஏனெனில் நம் உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் காலையில் எழுந்ததும், நம்முடைய உள்ளங்கையை பார்ப்பதை பழகிக் கொள்ள வேண்டும்.
  • தூங்கி எழுந்ததும் மற்றவர்களை பார்ப்பதை விட நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது சிறப்பானதாகும்.
  • தெய்வ படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டத்தையும் நல்ல சிந்தனைகளும் உண்டாக்கும்.
  • செல்வத்தை அள்ளித்தரும் மகாலக்ஷ்மியின் உருவத்தை பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் பணக்கஷ்டம் இல்லாமல் பண வரவை அதிகரிக்கும்.
  • நமக்கு தெரிந்த சில மந்திரங்களை சொல்லிவிட்டு பின் படுக்கையில் இருந்து எழுவது மிகவும் சிறந்ததாகும். இதனால் அன்றைய நாள் முழுவதும் சிறப்பானதாக அமையும்.

சுடர் விட்டு எரியும் தீபம்

  • சுடர் விட்டு எரியும் தீப ஒளியை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக  இருக்கும்.

பூரண கும்பம்

  • பூரண கும்பம் பார்க்கலாம், கோயில் கோபுரத்தை பார்க்கலாம், கோயில் மணி, பசு மாடு, கன்றுக்குட்டி, இயற்கை அழகு, இயற்கை காட்சி, அருவிகள், மலர்கள், அர்ப்புதமான இசைக்கருவிகள், மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட பொருட்களை பார்ப்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
  • காலையில் கணவன் மனைவி முகத்திலும் மனைவி கணவன் முகத்திலும் விழிப்பதும் அன்றைய நாளை நல்ல நாளாக அமைய காரணமாக இருக்கும்.

காலையில் எழுந்ததும் பார்க்க கூடாதவை

  • கண் விழித்ததும் அபசகுணமான வார்த்தைகளைப் பேசுவதும், கேட்பதும் சண்டை போடுவதையும் தவிர்ப்பது நல்லது.

ஆர்பரிக்கும் கடல் அலை

  • ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுவாலைகள் இவைகளை கட்டாயம் விழித்தவுடன் பார்க்கவே கூடாது. இவை எதிர்மறை எண்ணங்களை உருவாக்கக் கூடும்.
  • கண் விழிக்கும் போதே யாரையும் திட்டிக் கொண்டோ சண்டை போட்டுக் கொண்டோ எழுந்தரிக்க கூடாது.
  • படுக்கையில் இருந்து அவசர அவசரமாக பதறி எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு எழுவது நம் மூளை நரம்புகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

லிப்ஸ்டிக் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால்...
அதிரசம் செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம்....
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள்....
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.