காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

 

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும் போது, அன்று நல்ல நாளாக அமைய வேண்டும், மகிழ்ச்சிகரமான நாளாக அமைய வேண்டும் என்று எண்ணுவது வாடிக்கையான ஒன்று. இரவு தூங்கி  மறுநாள் எழுவோம் என்பது நிச்சயம் இல்லாத ஒன்றாகும். ஒவ்வொரு நாள் தூங்கி எழுவதும் நாம் புதிதாக பிறப்பதற்கு சமமாகும். எனவே ஒவ்வொரு நாளையும் நாம் புதிய நாளாகவே கருத வேண்டும்.

ஆழ்ந்த தூக்கம் என்பது மரணத்திற்கு நிகரான ஒன்றாகும். ஏன் என்றால் நாம் தூங்கும் போது அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற நினைவே இல்லாமல் இருக்கும். எனவே நாம் தூங்கி எழும் ஒவ்வொரு நாளும் புதிய நாளாகும்.

அவ்வாறு நாம்  தூங்கி எழும் போது நாம் பார்க்கும் முதல் விஷயம் நல்லதாக அமைய வேண்டும். காலையில் எழுந்தவுடன் சில பொருட்களை பார்ப்பதால் அன்றைய நாள் புத்துணர்வுடன் இருக்கும் என்று கூறுவார்கள். நாம் எழுந்தவுடன் எதை பார்க்கின்றோமோ அதன் தாக்கம் அந்த நாள் முழுவதும் இருக்கும்.

காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டியவை

உள்ளங்கை தரிசனம்

  • காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு உள்ளங்கையை பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் சிறப்பாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். ஏனெனில் நம் உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் காலையில் எழுந்ததும், நம்முடைய உள்ளங்கையை பார்ப்பதை பழகிக் கொள்ள வேண்டும்.
  • தூங்கி எழுந்ததும் மற்றவர்களை பார்ப்பதை விட நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது சிறப்பானதாகும்.
  • தெய்வ படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டத்தையும் நல்ல சிந்தனைகளும் உண்டாக்கும்.
  • செல்வத்தை அள்ளித்தரும் மகாலக்ஷ்மியின் உருவத்தை பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் பணக்கஷ்டம் இல்லாமல் பண வரவை அதிகரிக்கும்.
  • நமக்கு தெரிந்த சில மந்திரங்களை சொல்லிவிட்டு பின் படுக்கையில் இருந்து எழுவது மிகவும் சிறந்ததாகும். இதனால் அன்றைய நாள் முழுவதும் சிறப்பானதாக அமையும்.

சுடர் விட்டு எரியும் தீபம்

  • சுடர் விட்டு எரியும் தீப ஒளியை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக  இருக்கும்.

பூரண கும்பம்

  • பூரண கும்பம் பார்க்கலாம், கோயில் கோபுரத்தை பார்க்கலாம், கோயில் மணி, பசு மாடு, கன்றுக்குட்டி, இயற்கை அழகு, இயற்கை காட்சி, அருவிகள், மலர்கள், அர்ப்புதமான இசைக்கருவிகள், மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட பொருட்களை பார்ப்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
  • காலையில் கணவன் மனைவி முகத்திலும் மனைவி கணவன் முகத்திலும் விழிப்பதும் அன்றைய நாளை நல்ல நாளாக அமைய காரணமாக இருக்கும்.

காலையில் எழுந்ததும் பார்க்க கூடாதவை

  • கண் விழித்ததும் அபசகுணமான வார்த்தைகளைப் பேசுவதும், கேட்பதும் சண்டை போடுவதையும் தவிர்ப்பது நல்லது.

ஆர்பரிக்கும் கடல் அலை

  • ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுவாலைகள் இவைகளை கட்டாயம் விழித்தவுடன் பார்க்கவே கூடாது. இவை எதிர்மறை எண்ணங்களை உருவாக்கக் கூடும்.
  • கண் விழிக்கும் போதே யாரையும் திட்டிக் கொண்டோ சண்டை போட்டுக் கொண்டோ எழுந்தரிக்க கூடாது.
  • படுக்கையில் இருந்து அவசர அவசரமாக பதறி எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு எழுவது நம் மூளை நரம்புகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
spicy chickkan grevy

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது ) தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை...
மீன் வறுவல்

சுவையான மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

மீன் மிளகு வறுவல் மீன் ஒரு சத்தான ஆரோக்கியமான உணவாகும். மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு,...

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.