பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைப்பது ஏன்?

பாம்பு புற்றுக்கு பால், முட்டை

கோவில்கள், வயல்வெளிகள் ஆகியவற்றில் பாம்பு புற்று இருப்பதை பார்த்திருப்போம். பாம்பு புற்றுக்கு பால் மற்றும் முட்டை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். நம் முன்னோர்கள் பாம்பிற்குப் பால் மற்றும் முட்டை வைப்பார்கள். இது எதற்காக என பல பேருக்கு தெரியாது. ஒரு சிலர் பாம்பிற்கு முட்டையும் பாலும் மிகவும் பிடித்த உணவு அதனால் வைக்கிறார்கள் என கூறுவார்கள். ஆனால், உண்மை என்னவெனில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்டுள்ளது.

பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது சரியா

எதற்குப் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள்?

பண்டைய காலங்களில் மனிதர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியும், காடுகளை ஒட்டியும் இருந்தன. மனிதர்கள் உணவு தேவைக்காகவும், இன்ன பிற தேவைகளுக்கும் காடுகளை சார்ந்தே இருந்தார்கள். அப்போது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக வனவிலங்குகளும், விஷபூச்சிகளும், பாம்புகளும் இருந்தன. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் மனித நடமாட்டம் என்பது மிகவும். அப்போது மனிதனை விடப் பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஏனெனில் பாம்புகளின் இனபெருக்க விகிதம் அதிகம்.

அப்போது ஒரு உயிரை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அக்காலங்களில் மக்கள் இயற்கை, விலங்குகள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அவர்கள் பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்தனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் செய்வது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகரும் ஆண் பாம்பு பெண் பாம்பைத் இனப்பெருக்கத்துக்காக தேடி வரும். இவ்வாறு பாம்புகளின் இனபெருக்கம் நடக்கிறது.

பெண் பாம்பில் இருந்து வெளிவரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால், முட்டையிலிருந்து வெளிவரும் ஒருவித வாசனை தடுக்கிறது. ஆகவே பாம்புகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இப்படியாக பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினார்கள்.

இதையே நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம். இதன் உண்மையான காரணத்தை சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனால்தான் ஆன்மீக ரீதியாக இப்படியொரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.