லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும்.

தீபாவளி அன்று கேதார கெளரி விரதம், அமாவாசை, தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை, அதைத் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது.

லக்ஷ்மி குபேர பூஜை பலன்கள் இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24 ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே கேதார கெளரி விரதத்தை துவக்க வேண்டும். தீபாவளியன்று மாலை நேரத்தில் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலையில் தான் லட்சுமி குபேர பூஜையை செய்ய வேண்டும்.

லக்ஷ்மி குபேர பூஜை என்றால் என்ன?

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதாகும். ஆரம்பத்திலேயே குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. தான் பெரும் செல்வ வளத்தை பெற என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்ற ஆலோசனை கேட்டார்.

சிவ பெருமான் குபேரனிடம் ஐப்பசி மாதம் தீபாவளி திருநாள் அன்று அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் மாலை நேரத்தில் மகாலக்ஷ்மியை மனதார நினைத்து வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

 

குபேர எந்திரம் சிவ பெருமானின் யோசனையை ஏற்று குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து வணங்கி சகல செல்வங்களையும் பெற்று செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். இந்த நாளில்  நாமும் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வணங்கினால் நமக்கும் அந்த வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எப்படி பூஜை செய்ய வேண்டும்?

லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் மகாலக்ஷ்மியின் படம் அல்லது லட்சுமி குபேரரின் படத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர மற்ற உலோகங்களால் ஆன கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதன் மீது மட்டை தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

கலசத்தின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலை அல்லது தாம்பாலத்தில் பச்சரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

கலசம் வைக்காதவர்கள் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி பூஜை இந்த படத்திற்கு முன் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு உரிய தாமரை, துளசி ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.

அதோடு வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நெய்வேத்தியமாக பால் பாயாசம், கற்கண்டு சாதம், அவல் பாயாசம் செய்து படைக்கலாம்.

மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும், குபேரருக்கு நாணயங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நாணயங்கள் வைக்கும் போது ஒரே மாதிரியான 9 நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜைக்கு இரண்டு குத்துவிளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நெய்யினால் விளக்கேற்றி, முதலில் விநாயகர் பூஜை, பிறகு குலதெய்வ வழிபாடு, அதற்கு பிறகு மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு குபேரனுக்கு அவருக்கான மந்திரம் சொல்லி நாணயத்தால் ஆர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு தாமரை இதழ் எடுத்து அதன் மீது ஒர நாணயத்தை வைத்து, குங்குமம் வைத்து

“ஓம் குபேராய நம:

ஓம் தனபதியே நம:”

என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியின் பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி, குபேரர், குபேர யந்திரம் ஆகியவற்றிற்கு தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். நெய்வேத்தியத்தை மற்றவர்களுக்கு கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை செய்ய ஏற்ற நேரம்

தீபாவளி அன்று மாலையில் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த சமயத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
prawn katlet

இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட் தேவையான பொருட்கள் இறால் -  ½ கிலோ பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சைமிளகாய் – 1...
சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #10

ஜாதக யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது...
நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....
மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.