லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும்.

தீபாவளி அன்று கேதார கெளரி விரதம், அமாவாசை, தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை, அதைத் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது.

லக்ஷ்மி குபேர பூஜை பலன்கள் இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24 ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே கேதார கெளரி விரதத்தை துவக்க வேண்டும். தீபாவளியன்று மாலை நேரத்தில் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலையில் தான் லட்சுமி குபேர பூஜையை செய்ய வேண்டும்.

லக்ஷ்மி குபேர பூஜை என்றால் என்ன?

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதாகும். ஆரம்பத்திலேயே குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. தான் பெரும் செல்வ வளத்தை பெற என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்ற ஆலோசனை கேட்டார்.

சிவ பெருமான் குபேரனிடம் ஐப்பசி மாதம் தீபாவளி திருநாள் அன்று அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் மாலை நேரத்தில் மகாலக்ஷ்மியை மனதார நினைத்து வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

 

குபேர எந்திரம் சிவ பெருமானின் யோசனையை ஏற்று குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து வணங்கி சகல செல்வங்களையும் பெற்று செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். இந்த நாளில்  நாமும் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வணங்கினால் நமக்கும் அந்த வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எப்படி பூஜை செய்ய வேண்டும்?

லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் மகாலக்ஷ்மியின் படம் அல்லது லட்சுமி குபேரரின் படத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர மற்ற உலோகங்களால் ஆன கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதன் மீது மட்டை தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

கலசத்தின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலை அல்லது தாம்பாலத்தில் பச்சரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

கலசம் வைக்காதவர்கள் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி பூஜை இந்த படத்திற்கு முன் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு உரிய தாமரை, துளசி ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.

அதோடு வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நெய்வேத்தியமாக பால் பாயாசம், கற்கண்டு சாதம், அவல் பாயாசம் செய்து படைக்கலாம்.

மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும், குபேரருக்கு நாணயங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நாணயங்கள் வைக்கும் போது ஒரே மாதிரியான 9 நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜைக்கு இரண்டு குத்துவிளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நெய்யினால் விளக்கேற்றி, முதலில் விநாயகர் பூஜை, பிறகு குலதெய்வ வழிபாடு, அதற்கு பிறகு மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு குபேரனுக்கு அவருக்கான மந்திரம் சொல்லி நாணயத்தால் ஆர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு தாமரை இதழ் எடுத்து அதன் மீது ஒர நாணயத்தை வைத்து, குங்குமம் வைத்து

“ஓம் குபேராய நம:

ஓம் தனபதியே நம:”

என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியின் பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி, குபேரர், குபேர யந்திரம் ஆகியவற்றிற்கு தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். நெய்வேத்தியத்தை மற்றவர்களுக்கு கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை செய்ய ஏற்ற நேரம்

தீபாவளி அன்று மாலையில் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த சமயத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க

கோடை வெயிலில் இருந்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

சரும பராமரிப்பு கோடை காலத்தில் அதிக அளவில் பாதிக்கப்படுவது நமது சருமம் மற்றும் தலைமுடி தான். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்தது உடல் சோர்வடைந்து பொலிவிழந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து ...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.