லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும்.

தீபாவளி அன்று கேதார கெளரி விரதம், அமாவாசை, தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை, அதைத் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது.

லக்ஷ்மி குபேர பூஜை பலன்கள் இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24 ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே கேதார கெளரி விரதத்தை துவக்க வேண்டும். தீபாவளியன்று மாலை நேரத்தில் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலையில் தான் லட்சுமி குபேர பூஜையை செய்ய வேண்டும்.

லக்ஷ்மி குபேர பூஜை என்றால் என்ன?

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதாகும். ஆரம்பத்திலேயே குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. தான் பெரும் செல்வ வளத்தை பெற என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்ற ஆலோசனை கேட்டார்.

சிவ பெருமான் குபேரனிடம் ஐப்பசி மாதம் தீபாவளி திருநாள் அன்று அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் மாலை நேரத்தில் மகாலக்ஷ்மியை மனதார நினைத்து வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

 

குபேர எந்திரம் சிவ பெருமானின் யோசனையை ஏற்று குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து வணங்கி சகல செல்வங்களையும் பெற்று செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். இந்த நாளில்  நாமும் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வணங்கினால் நமக்கும் அந்த வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எப்படி பூஜை செய்ய வேண்டும்?

லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் மகாலக்ஷ்மியின் படம் அல்லது லட்சுமி குபேரரின் படத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர மற்ற உலோகங்களால் ஆன கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதன் மீது மட்டை தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

கலசத்தின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலை அல்லது தாம்பாலத்தில் பச்சரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

கலசம் வைக்காதவர்கள் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி பூஜை இந்த படத்திற்கு முன் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு உரிய தாமரை, துளசி ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.

அதோடு வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நெய்வேத்தியமாக பால் பாயாசம், கற்கண்டு சாதம், அவல் பாயாசம் செய்து படைக்கலாம்.

மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும், குபேரருக்கு நாணயங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நாணயங்கள் வைக்கும் போது ஒரே மாதிரியான 9 நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜைக்கு இரண்டு குத்துவிளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நெய்யினால் விளக்கேற்றி, முதலில் விநாயகர் பூஜை, பிறகு குலதெய்வ வழிபாடு, அதற்கு பிறகு மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு குபேரனுக்கு அவருக்கான மந்திரம் சொல்லி நாணயத்தால் ஆர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு தாமரை இதழ் எடுத்து அதன் மீது ஒர நாணயத்தை வைத்து, குங்குமம் வைத்து

“ஓம் குபேராய நம:

ஓம் தனபதியே நம:”

என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியின் பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி, குபேரர், குபேர யந்திரம் ஆகியவற்றிற்கு தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். நெய்வேத்தியத்தை மற்றவர்களுக்கு கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை செய்ய ஏற்ற நேரம்

தீபாவளி அன்று மாலையில் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த சமயத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...
வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.