லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும்.

தீபாவளி அன்று கேதார கெளரி விரதம், அமாவாசை, தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை, அதைத் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது.

லக்ஷ்மி குபேர பூஜை பலன்கள் இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24 ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே கேதார கெளரி விரதத்தை துவக்க வேண்டும். தீபாவளியன்று மாலை நேரத்தில் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலையில் தான் லட்சுமி குபேர பூஜையை செய்ய வேண்டும்.

லக்ஷ்மி குபேர பூஜை என்றால் என்ன?

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதாகும். ஆரம்பத்திலேயே குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. தான் பெரும் செல்வ வளத்தை பெற என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்ற ஆலோசனை கேட்டார்.

சிவ பெருமான் குபேரனிடம் ஐப்பசி மாதம் தீபாவளி திருநாள் அன்று அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் மாலை நேரத்தில் மகாலக்ஷ்மியை மனதார நினைத்து வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

 

குபேர எந்திரம் சிவ பெருமானின் யோசனையை ஏற்று குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து வணங்கி சகல செல்வங்களையும் பெற்று செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். இந்த நாளில்  நாமும் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வணங்கினால் நமக்கும் அந்த வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எப்படி பூஜை செய்ய வேண்டும்?

லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் மகாலக்ஷ்மியின் படம் அல்லது லட்சுமி குபேரரின் படத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர மற்ற உலோகங்களால் ஆன கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதன் மீது மட்டை தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

கலசத்தின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலை அல்லது தாம்பாலத்தில் பச்சரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

கலசம் வைக்காதவர்கள் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி பூஜை இந்த படத்திற்கு முன் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு உரிய தாமரை, துளசி ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.

அதோடு வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நெய்வேத்தியமாக பால் பாயாசம், கற்கண்டு சாதம், அவல் பாயாசம் செய்து படைக்கலாம்.

மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும், குபேரருக்கு நாணயங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நாணயங்கள் வைக்கும் போது ஒரே மாதிரியான 9 நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜைக்கு இரண்டு குத்துவிளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நெய்யினால் விளக்கேற்றி, முதலில் விநாயகர் பூஜை, பிறகு குலதெய்வ வழிபாடு, அதற்கு பிறகு மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு குபேரனுக்கு அவருக்கான மந்திரம் சொல்லி நாணயத்தால் ஆர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு தாமரை இதழ் எடுத்து அதன் மீது ஒர நாணயத்தை வைத்து, குங்குமம் வைத்து

“ஓம் குபேராய நம:

ஓம் தனபதியே நம:”

என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியின் பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி, குபேரர், குபேர யந்திரம் ஆகியவற்றிற்கு தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். நெய்வேத்தியத்தை மற்றவர்களுக்கு கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை செய்ய ஏற்ற நேரம்

தீபாவளி அன்று மாலையில் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த சமயத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஜோதிடரால் கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

வாய் துர்நாற்றம் வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள் முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.