கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள்

மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும் பார்க்கலாம். இதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து பலரும் செய்வதை நாம் இன்றும் பார்க்கலாம். ஏன் கோவில் கிணறு, குளத்தில் காசு போடுகிறோம் என பலருக்கும் தெரியாது. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் இங்கு பார்க்கலாம்.

கோவில் குளத்தில் காசு போடுவது

செம்பு உலோகம்

அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. செம்பு உலோகமானது மண், நீர் வண்டல் மற்றும் காற்றில் இயற்கையாக உருவாகிறது. நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில உலோகங்கள் நமது உடலில் கலப்பது அவசியமாகும். அந்த வகையில் செம்பு உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது. செம்பை தண்ணீருக்குள் போட்டு வைப்பதும், தண்ணீர் எடுக்கப் பயன்படுத்வதற்கும் என செம்புப் பாத்திரங்கள் உபயோகிக்கும் பழக்கம் அக்காலங்களில் இருந்தது.

நீர் ஆதாரம்

அக்காலங்களில் நீரானது குழாய்கள் மூலம் விநியோகிக்கும் முறை இல்லை. மக்கள் தங்கள் நீர் தேவைக்கு குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றையே சார்ந்திருந்தனர். குளம், கிணறுகளில் உள்ள தண்ணீருடன் செம்பு கலந்த பின் அந்த நீரை அருந்துவது வலிமையும் குளிர்ச்சியும் தந்து நலம் பயக்கும். குளம் இல்லாத கோயிலை பார்ப்பதே அக்காலத்தில் மிகவும் அரிது. இதனால் செப்புக் காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இக்காலத்தில் குளம் மற்றும் கிணற்று நீரை முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

கோவில் குளத்தில் காசு போடுவதற்கான காரணம்

இரும்பு காசு

இப்போதுள்ள கால கட்டத்தில் செப்பு காசு முறையே அடியோடு அழிந்துவிட்டது. ஆனால் நாம் அக்கால முறையான காசு போடுவதையே, இன்றும் ஒரு வழக்கமாக நினைத்து நம்மில் பலர் இரும்பு காசுகளை இன்றும் கோவில் குளம், கிணறுகளில் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் செம்பு காசுகளை கிணறு, குளத்தில் போடுவதே நமக்கு நன்மை அளிக்கும்.

நம்முடைய தமிழரின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. மஞ்சள் தெளிப்பது, பாயில் உறங்குவது என நம் முன்னோர்கள் செய்த அனைத்தும் அறிவியலுடன் கலந்தது. நாம் செய்யும் அனைத்து செயலுக்கு பின்னாலும் அறிவியல் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.