புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் கோவிந்தா என்னும் திருநாமமே. நாளை 17.09.2021 அன்று புரட்டாசி மாதம் ஆரம்பம் ஆகிறது.

புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பனாதகும்.

புரட்டாசி மாத வழிபாடு பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு துளசி தீர்த்தம் வைத்து கோவிந்தா கோவிந்தா என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டால் மிகவும் சிறப்பு.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?புரட்டாசி மாத வழிபாட்டு முறைகள்

  1. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை படைத்து வழிபட வேண்டும்.
  2. அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  3. அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. பூஜை அறையில் உள்ள  அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்கரிக்கவும்.
  5. உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்ரகமாகவோ இருந்தால் அதனை எடுத்து நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்காரம் செய்யவும்.
  6. பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஏற்றவும்.
  7. பின்பு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக செய்தவற்றை படைக்கவும்.
  8. படையலில் முக்கியமாக இடம்பெற வேண்டியது மாவிளக்கு, துளசி தீர்த்தம்..
  9. பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
  10. துளசி தீர்த்தம் வைக்க வேண்டும்.
  11. மாவிளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
  12. பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயாசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்க வேண்டும்.
  13. வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  14. பின் கற்பூர தீபாராதனை மற்றும் சாம்ப்ராணி காட்டி பெருமாளை வழிபட வேண்டும்.
  15. முதலில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  16. பின் படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
  17. இவ்வாறு வழிபடுவாதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைத்து திருமாலின் பார்வை நம் மீது படும். வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்க்கை அமையப் பெரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.