புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் கோவிந்தா என்னும் திருநாமமே. நாளை 17.09.2021 அன்று புரட்டாசி மாதம் ஆரம்பம் ஆகிறது.

புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பனாதகும்.

புரட்டாசி மாத வழிபாடு பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு துளசி தீர்த்தம் வைத்து கோவிந்தா கோவிந்தா என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டால் மிகவும் சிறப்பு.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?புரட்டாசி மாத வழிபாட்டு முறைகள்

  1. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை படைத்து வழிபட வேண்டும்.
  2. அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  3. அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. பூஜை அறையில் உள்ள  அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்கரிக்கவும்.
  5. உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்ரகமாகவோ இருந்தால் அதனை எடுத்து நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்காரம் செய்யவும்.
  6. பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஏற்றவும்.
  7. பின்பு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக செய்தவற்றை படைக்கவும்.
  8. படையலில் முக்கியமாக இடம்பெற வேண்டியது மாவிளக்கு, துளசி தீர்த்தம்..
  9. பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
  10. துளசி தீர்த்தம் வைக்க வேண்டும்.
  11. மாவிளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
  12. பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயாசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்க வேண்டும்.
  13. வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  14. பின் கற்பூர தீபாராதனை மற்றும் சாம்ப்ராணி காட்டி பெருமாளை வழிபட வேண்டும்.
  15. முதலில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  16. பின் படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
  17. இவ்வாறு வழிபடுவாதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைத்து திருமாலின் பார்வை நம் மீது படும். வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்க்கை அமையப் பெரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள் சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இரவில் தயிருடன் சிறிதளவு...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
திருமண தோஷம்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஜாதகத்தில் இருக்கிற கிரகங்கள் தான் ஒருவரை யோகம் உள்ளவராகவும், யோகம் அற்றவராகவும் மாற்றுகிறது. அதே போல தான் ஒவ்வொரு ஜாதகருக்கும் தோஷம் அமைகிறது. நாம் முந்தைய பிறப்பில் செய்த...
திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.