புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் கோவிந்தா என்னும் திருநாமமே. நாளை 17.09.2021 அன்று புரட்டாசி மாதம் ஆரம்பம் ஆகிறது.

புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பனாதகும்.

புரட்டாசி மாத வழிபாடு பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு துளசி தீர்த்தம் வைத்து கோவிந்தா கோவிந்தா என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டால் மிகவும் சிறப்பு.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?புரட்டாசி மாத வழிபாட்டு முறைகள்

  1. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை படைத்து வழிபட வேண்டும்.
  2. அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  3. அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. பூஜை அறையில் உள்ள  அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்கரிக்கவும்.
  5. உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்ரகமாகவோ இருந்தால் அதனை எடுத்து நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்காரம் செய்யவும்.
  6. பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஏற்றவும்.
  7. பின்பு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக செய்தவற்றை படைக்கவும்.
  8. படையலில் முக்கியமாக இடம்பெற வேண்டியது மாவிளக்கு, துளசி தீர்த்தம்..
  9. பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
  10. துளசி தீர்த்தம் வைக்க வேண்டும்.
  11. மாவிளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
  12. பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயாசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்க வேண்டும்.
  13. வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  14. பின் கற்பூர தீபாராதனை மற்றும் சாம்ப்ராணி காட்டி பெருமாளை வழிபட வேண்டும்.
  15. முதலில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  16. பின் படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
  17. இவ்வாறு வழிபடுவாதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைத்து திருமாலின் பார்வை நம் மீது படும். வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்க்கை அமையப் பெரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
எண் கணிதம் எப்படி பார்ப்பது

எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதத்தை பார்ப்பது எப்படி?

எண் கணிதம் நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். 'எண்களை'...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம்...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.