நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும்

நவராத்திரி வழிபாடு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம்.

நாளை வியாழக்கிழமை  11.06.2021 அன்று  நவராத்திரி விழா ஆரம்பம் ஆகிறது. நாளை முதல் நவராத்திரி கொலு வைத்து அம்பிகையை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நவராத்திரியின் முதல் நாளான நாளை  பிரதீபாத திதியில், நவதுர்கையில் முதல் அம்சமான சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படும்.

நவராத்திரியின் ஒன்பது  நாட்கள் முடிவில் அக்டோபர் 14, 15ம் தேதி முறையே ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட்டு நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும்.

நவராத்திரி விரதம் என்பது சக்தியை போற்றக்கூடிய விரதமாகும்.  இந்தியா முழுவதும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படக்கூடிய தீபாவளி, பொங்கல், போன்ற பெரிய பண்டிகைகளில் நவராத்திரியும் மிக முக்கியமான பண்டிகையாகும்.

நவராத்திரி விரதம் கடைபிடிக்கக் கூடிய 9 நாட்களும் வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். வடமாநிலங்களில் நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம்.

நவராத்திரி கொலு வைப்பது என்பது பல படிகளில் பலவிதமன  புராண கதைகளை கூறும் பொம்மைகளை அலங்கரித்து வைப்பதேயாகும். நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. கொலுவில் வைத்திருக்கும் பொம்மைகள் அவரவர் வசதியை பொருத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வைக்கலாம். அனால் அவை ஒற்றைப்படை எண்ணில்தான் இருக்க வேண்டும்.

மனிதன் எப்படி படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

நவராத்திரியின் ஒன்பது நாட்கள்

கொலு வைப்பது எப்படி நவராத்திரி விழா கொண்டாடப்படுவதற்கு காரணம் சிவபெருமான் தனது மனைவி துர்கா தேவிக்கு தனது தாயை சென்று பார்த்து வருவதற்கு ஒன்பது நாட்கள் அனுமதி அளித்ததாக கூறப்ப்படுகிறது. அந்த நேரத்தில், துர்கா தேவி மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்கிறாள். பிரம்மனிடம் வரம் பெற்ற ஆணவத்தில் சுற்றி திரிந்த அசுரனை வதம் செய்ய கடும் தவம் இருந்து, முப்பெரும் தேவிகளான பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஒன்றிணைந்து மகா காளியாக உருவெடுத்து மகிஷாசுரனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் துர்கா தேவி சக்தியின் ரூபமாக, ஆற்றல் நிறைந்தவராக இந்த உலகிற்கு காட்சியளித்தார். அதன் நினைவாகவே ஒவ்வொரு வருடமும் நவராத்திரி தினத்தன்று துர்கா தேவியின் 9 வடிவங்களுக்கும் பூஜை செய்து பிரார்த்திக்கின்றோம்.

நவராத்திரி விரதம்

நவராத்திரி பூஜை நவராத்திரி விரதம் இருக்கும் பெண்கள் தாமும் சுத்தமாக இருந்து வீட்டினையும் சுத்தமாக வைத்துக் கொண்டு ஒரு வேளை மட்டுமே உணவு அருந்தி விரதம் இருக்க வேண்டும்.

கொலு வைக்கும் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான நெய்வேத்தியங்களை அம்மனுக்கு படைக்க வேண்டும்.

இந்த சிறப்பு வாய்ந்த நவராத்திரி நன்னாளில் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை பராசக்தியாக பாவித்து அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ,அம்பிகைக்கு படைத்த நெய்வேத்திய பிரசாதம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பராசக்த்தியின் அருள் முழுமையாக கிடைக்கபெறும். மாங்கல்ய பலம் கூடும், தீர்க்க சுமங்கலியாக இருக்க அம்பிகையின் அருள் கிடைக்கும்.

திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...
riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.