உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம்

watermelon payasamதேவையான பொருட்கள்

  • தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது )
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  • சர்க்கரை – 100 கிராம்
  • பால் – 1 லிட்டர்
  • ஜவ்வரிசி – 50 கிராம் ( ஊற வைத்தது )
  • ஏலக்காய் தூள் – தேவையான அளவு

செய்முறை

  • தர்பூசணி பாயாசம் செய்வதற்கு தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • 50 கிராம் ஜவ்வரிசியை நன்கு கழுவி ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே நெய்யில் நறுக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு வாணலியில் 1 லிட்டர் பாலை சேர்த்து மிதமான தீயில் வைத்து  காய்ச்சவும்.
  • பால் காய்ந்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும்.
  • ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வெந்ததும் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
  • இவை அனைத்தையும் சேர்த்த பின் பால் சிறிதளவு கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து கலந்து விடவும்.
  • கடைசியாக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கி சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறினால் சுவையான குளு குளு தர்பூசணி பாயாசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

elumbu theimnaththai sari seyyum unavugal

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

எலும்பு தேய்மானம் எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது...
நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
செம்பருத்திப் பூ டீ

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள் தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும்...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.