நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு

நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக செய்யலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10 No’s
தக்காளி – 4 No’s
எண்ணெய் – 50 ml
தேங்காய் பால் – 1 கப்
மல்லி தூள் – 3 Tbs
சோம்பு – 1 Tbs
மஞ்சள் தூள் – 1 Tbs
கரம் மசாலா – 1 Tbs
மிளகாய் தூள் – 1 Tbs
பச்சை மிளகாய் – 2 No’s
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1. சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

2. வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பாதி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

4. இவற்றை வதக்கிய பின்பு அவற்றை ஆறவைத்து மிக்ஸிசியில் மையாக அரைத்து கொள்ளவும்.

5. பின்பு சுத்தம் செய்த நாட்டுக்கோழியை சிறிய துண்துகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

6. குக்கரில் தேவையான் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

7. மேற்கூறிய பொருட்கள் நன்கு வதங்கிய பின் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த நாட்டு கோழியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். குக்கரை சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைத்து கொள்ள வேண்டும்.

8. 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடவும்.

9. நாட்டு கோழி வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் 5 விசில் வரும் வரை அதை வேக விடவும், அப்பொழுதுதான் கறி நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

10. 5 விசில் இறங்கின பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சாத்துக்குடி பழம் மருத்துவ நன்மைகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த சாத்துக்குடி பழம்

சாத்துக்குடி பழம் சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் சாத்துக்குடி வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...
அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள்

அக்கரகாரம் மூலிகை பயன்கள்

அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும்,...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன்...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.