நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு

நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக செய்யலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10 No’s
தக்காளி – 4 No’s
எண்ணெய் – 50 ml
தேங்காய் பால் – 1 கப்
மல்லி தூள் – 3 Tbs
சோம்பு – 1 Tbs
மஞ்சள் தூள் – 1 Tbs
கரம் மசாலா – 1 Tbs
மிளகாய் தூள் – 1 Tbs
பச்சை மிளகாய் – 2 No’s
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1. சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

2. வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பாதி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

4. இவற்றை வதக்கிய பின்பு அவற்றை ஆறவைத்து மிக்ஸிசியில் மையாக அரைத்து கொள்ளவும்.

5. பின்பு சுத்தம் செய்த நாட்டுக்கோழியை சிறிய துண்துகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

6. குக்கரில் தேவையான் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

7. மேற்கூறிய பொருட்கள் நன்கு வதங்கிய பின் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த நாட்டு கோழியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். குக்கரை சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைத்து கொள்ள வேண்டும்.

8. 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடவும்.

9. நாட்டு கோழி வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் 5 விசில் வரும் வரை அதை வேக விடவும், அப்பொழுதுதான் கறி நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

10. 5 விசில் இறங்கின பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...
நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில்...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
கம்பு அல்வா செய்முறை

புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்...
நவராத்திரி ஒன்பது நாட்கள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு "நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்து உலகிற்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.