செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல்

மட்டன் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள்

  1. மட்டன் கால் – ½ கிலோ  ( எலும்பில்லாதது )
  2. சோம்பு – ½ ஸ்பூன்
  3. பட்டை – 1 துண்டு
  4. கிராம்பு – 2
  5. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. மல்லி தூள் –  2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் – 1௦௦ கிராம் ( பொடியாக நறுக்கியது )
  11. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  13. உப்பு – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. மட்டனை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு குக்கரில் நறுக்கிய மட்டன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
  4. இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  5. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. மட்டன் வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து பொரிய விடவும்.
  9. சோம்பு பொரிந்தவுடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  10. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  11. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
  12. வெங்காயம் நன்கு சிவக்க வதக்கிக் கொள்ளவும்.
  13. வெங்காயம் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும். மசாலா நன்கு வதங்கியதும் வேக வைத்த மட்டனை சேர்த்துக் கொள்ளவும்.
  14. மட்டனை சேர்த்த பின் நன்கு கிளறி ஒரு மூடி போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  15. 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து நன்கு கிளறவும்.
  16. கிளறிய பின் சிறிதளவு மிளகு தூள் , 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
  17. கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான காரசாரமான செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...

Riddles with Answers | Puzzles and vidukathaigal

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...
4 வகை ராசிகளும் அதன் குணங்களும்

4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் குணங்களும் நீரும், நெருப்பும் ஒன்றாக இணையாது. நிலத்தோடு காற்றும் இணையாது. ஆனால் நெருப்போடும் காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலத்தான் இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம்...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.