இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி 

கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க கம்பு மிகவும் பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் கம்பினால் செய்யப்பட்ட உணவினை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. கம்பு இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

கம்பு குழி பணியாரம் செய்முறை 
தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி – 1 கப்
  2. கம்பு – 1 கப்
  3. உளுந்து – ½ கப்
  4. பொடித்த வெல்லம் – 1 கப்
  5. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  6. தேங்காய் துருவல் – சிறிதளவு
  7. எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

செய்முறை

  1. பணியாரம் செய்வதற்கு முதலில் உளுந்து, கம்பு , பச்சரிசி மூன்றையும் சுத்தம் செய்து கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. 3 மணி நேரம் ஊறிய பின் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மாவில் பொடித்த வெல்லம் , தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. கலந்த மாவினை ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
  5. 10 நிமிடத்திற்கு பின் பணியார கல்லில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி மிதமான தீயில்  பணியார மாவினை ஊற்ற வேண்டும்.
  6. பணியாரம் ஒரு பக்கம் வெந்தவுடன் மற்றொரு பக்கம் திருப்பி விடவும்.
  7. இரண்டு பக்கமும் வெந்தவுடன் சுடச் சுட எடுத்து பரிமாறினால் சுவையான கம்பு இனிப்பு பணியாரம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில்...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.