வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்?

வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும், எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்ய வேண்டும்.

சிலர் நம்மிடம் பேசும் போது மிகவும் அழகாக இருக்கும். அவர்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் நம்மிடமும் உண்டாவதை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை நேர்த்தியாக வைக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

உடைந்த கண்ணாடி வீட்டை நாம் எப்படி பராமரித்து சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கிறோமோ அதை வைத்து தான் நம் எண்ணங்களும் வாழ்க்கையும் அமையும். வீடு தூய்மையாக இருந்தால் மனதில் குழப்பங்கள், தேவையில்லாத சிந்தனைகள் ஏற்படாது. வீட்டில் சில தேவையற்ற பொருட்களை வைத்திருப்பதின் மூலமாகவும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வீட்டில் எதை வைத்திருக்கலாம், எதை வைத்திருக்கக் கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

நேர்மறை எண்ணங்கள்

நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் மனதில் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்திற்குக்கும். ஒரு சில இடங்களுக்கு நாம் செல்லும்போது நல்ல மனமுள்ள வாசனை மிகுந்த பத்திகள் ,அறைகளுக்கு பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதை கவனித்திருப்பீர்கள்.

அத்தகைய வாசனைமிக்க பொருட்கள் இயல்பாகவே நல்ல எண்ணங்களை அதிகரிக்க செய்யும், இத்தகைய வாசனை எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது.

வீட்டின் தலைவாசலுக்கு முன்பு தினமும் தண்ணீர் தெளித்து துடைத்து, கோலமிடுவதும், மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் நேர்மறை சக்திகளை எளிதாக வீட்டுக்குள் வரவழைக்கும். காலையில் எழுந்து குளித்த பின்னர் நறுமணம் தரும் ஊதுபத்திகளை சமையல் அறை மற்றும் ஹால் பகுதிகளில் ஏற்றி வைக்கலாம்.

உடைந்த மண் பாண்டங்கள்வீட்டிற்குள் இருக்கும்போது காலணிகள் அணியாமல் நடப்பது நல்லது. தரையில் பாதம் பதியும்போது, எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்வதால், உடலில் ‘ஆற்றல் சமநிலை’ உண்டாகும். வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழையும் முன்பு, காலணிகளை தலை வாசலுக்கு வெளிப்புறமாக விட வேண்டும். கை, கால்களை நன்றாகக் கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது நல்லது.

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்

வீடு, அலுவலகங்களில் எதிர்மறை ஆற்றல்களை தூண்டி விடக்கூடிய தேவையில்லாத அதாவது வீட்டில் வைத்திருக்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், கோபம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

துருப்பிடத்த பழைய இரும்பு அவ்வாறு எதிர்மறை எண்ணங்களையும், ஆற்றல்களையும் ஏற்படுத்தக்கூடியதாக உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள், காய்ந்த செடிகள் அல்லது பட்டுப்போன மரங்கள், ஓடாத கடிகாரம், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், உபயோகம் இல்லாத பழைய துணிகள், போன்றவற்றை கண்டிப்பாக வைத்திருக்கக்கூடாது. அதனால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடவேண்டும்.

ஏன் இவற்றை எல்லாம் நம் வீட்டில் வைத்திருக்க கூடாத என்றால் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, முகம் பார்க்கமுடியாத வகையில் இரசம் போன கண்ணாடிகள், உடைந்த கண்ணாடி வளையல்கள், விரிசல் விழுந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள் போன்றவைகள் வீட்டில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும்.

காய்ந்த மரம், பூச்செடிகள் காய்ந்த செடிகள் இருந்தால் அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணைகளில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் வறுமையை உண்டாக்கும்.

ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். அதனால் கடன் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் போன்றவைகள் இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.

இது போன்ற காரணங்களினால் அவைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது. இவ்வகையான தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வீட்டினை சுத்தமாகவும், அழகாவும், பராமரித்து வைத்திருந்தால் வீட்டில் ஆரோக்கியமும், சகல ஐஸ்வர்யங்களும் என்றும் நிறைந்திருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...
திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்? திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....
சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.