ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள்

ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி நாளை 21.04.2021 அன்று கொண்டாடப்படுகிறது.

ராம நவமி என்றால் என்ன ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இந்த விழா ஒரு நாள் மட்டுமல்லாது தொடர்ந்து பத்து நாட்களுக்கு விஷ்ணு ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது.

ராமர் ராம அவதாரத்தில் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்பதற்கேற்றார் போல் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் உலகிற்கு வாழ்ந்து காட்டி ராம பக்தர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்கினார்.

ஸ்ரீராமநவமி என்று பெயர் வர காரணம்

ராமர் அவதரித்த நாளை நாம் ராமநவமி என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.  ‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள்.

இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் மஹாவிஷ்ணுவிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும்  ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமநவமி வழிபடும் முறைகள்

ஸ்ரீராமநவமி அன்று வீடு, வாசல், பூஜை அரை அனைத்தையும் சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேகம் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

ராம நவமி விரதம் இருப்பது எப்படி அன்றைய தினம் ஒரு வேளையாவது விரதம் இருந்து ஸ்ரிராமநாமத்தை உள்ளன்போடு சொல்ல வேண்டும். ராமநாமத்தை சொல்வதோடு மட்டுமல்லாமல் எழுதுவதும் மிக சிறந்ததாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் பல்வேறு சிறப்புகள் உண்டாகும். ராமநவமி அன்று ராமரை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் ராம பக்தரான அனுமனை வழிபடுவதும் சிறப்பான ஒன்றாகும்.

சுவாமிக்கு நெய்வேத்தியமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் தீப ஆரதானை காண்பித்த பின்னர் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து நாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று ராம பஜனைகள் நடைபெறுவதை கேட்கலாம். இறுதியாக ராமர், சீதா கல்யாண வைபோகத்தை கண்டுகளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சங்கடங்கள் உள்ளவர்கள் அனைவரும் திருக்கல்யாணத்தை கான வேண்டும். இதனால் திருமண தடைகள் அனைத்தும் தகர்ந்து விரைவில் திருமணம் நடைபெறும்.

அன்றைய தினம் ராம பக்த்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்து நீர்மோர், பானகம் கொடுப்பது சிறப்பாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
மாம்பழ பாயாசம்

சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம் தேவையான பொருட்கள் மாம்பழ விழுது - ஒரு கப் மாம்பழ துண்டுகள் - ½ கப் சர்க்கரை – ½ கப் பால் - 1 லிட்டர் நெய் – சிறிதளவு ...
சிக்கன் சமோசா

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி தேவையான பொருள்கள் சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது) இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது ) எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு மைதா...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...
மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.