அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

 கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்த பூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது.

அறுபதாம் கல்யாணம் எப்படி செய்வது முன்னோர்களின் பாரம்பரியம்

ஒரு மனிதன் முதல் திருமணத்தில் இல்லற வாழ்க்கைக்குள் நுழைகிறான். அன்று முதல் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான். அதுபோல அறுபதாம் திருமணத்தில் இல்லறக் கடமைகளை நிறைவு செய்து துறவற வாழ்க்கைக்குள் நுழைகிறான். இவற்றை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியே அறுபதாம் திருமணம். இவற்றை திருக்குறளும் வலியுறுத்துகிறது.

அதாவது இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

மேலும், அதுவரை ஒரு பெண் மனைவியாக வந்து துணையிருந்து குடும்பத்தையும், பிள்ளைகளையும் தாங்கினாள். பிறகு குடும்பத்தை துறந்த பின் கணவர் துணை இருந்து தாங்க வேண்டும் என்பதே இதன் பாரம்பரியமாகும்.

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன வயதும், வாழ்க்கையும்

20 வயது வரை நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை.

20 – 40 வரை சிகரத்தை அடைய தொடத் துடிக்கின்ற வாழ்க்கை.

40 – 60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை.

60 க்கு மேல் தெளிவான , அமைதியான , பொறுப்புகளை முடித்து நிம்மதியான வாழ்க்கை.

60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்கியமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

அறுபதாம் கல்யாணம் செய்யத் தவறினால் பெரிய தவறு ஒன்றும் நிகழப்போவதில்லை. நம்முடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்ப்பதற்காகவே இத்திருமணம் செய்யப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள் முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும்....
மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.