ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

spicy chickkan grevy

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ½ கிலோ
  2. வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது )
  3. தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது )
  4. பச்சை மிளகாய் – 2 ( நீளவாக்கில் நறுக்கியது )
  5. துருவிய தேங்காய் – ½ கப்
  6. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  7. தனியா – 1 ஸ்பூன்
  8. கசகசா – 1 ஸ்பூன்
  9. சீரகம் – 1 ஸ்பூன்
  10. சோம்பு – ½ ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  12. பட்டை துண்டு – 1
  13. ஏலக்காய் – 2
  14. கிராம் – 2
  15. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  16. உப்பு – தேவையான அளவு
  17. எண்ணெய் – தேவையான அளவு
  18. கருவேப்பிலை – சிறிதளவு
  19. கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும். சிக்க்கனில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.
  3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து  தனியா, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து சுமார் 2 நிமிடத்திற்கு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  4. வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. ½ கப் தேங்காய் துருவலை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் கசகசாவையும்  சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  7. எண்ணெய் சூடானதும் அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  9. தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  10. பின் இத்துடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  11. சிக்கன் ஓரளவிற்கு வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும், இத்துடன் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  12. மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  13. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
  14. நன்கு கொதித்த பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  15. தேங்காய் விழுது சேர்த்து அதிக நேரம் கொதிக்காமல் சிறிது நேரம் கொதித்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

puzzles

Puzzles with Answers | Puthirgal | Brain teasers

புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும்...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
தூதுவளை நன்மைகள்

தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.