வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன?

வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரஜ்ஜூவாக, அல்லது ரஜ்ஜூ பொருத்தம் இல்லாத நட்சத்திரமாக கூட அமையும். ரஜ்ஜூ பொருத்தத்தில் கூட மணவாழ்வு குறுகிய காலம் அமைந்தால் கூட வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆனால், வேதை நட்சத்திரங்களை இணைத்தால் அந்த குறுகிய கால மணவாழ்வு கூட துன்பமாக தான் இருக்கும்.

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் அவர்கள் கணவன், மனைவியான பின்பு இருவரும் சண்டை சச்சரவுகளுடன் தான் வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எந்நேரமும் சண்டையும், வம்பும் வழக்கும், வேதனையாகவே இருக்கும். வேதைப்பொருத்தம் சரியாக இருந்தால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும். கணவன், மனைவி இருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதை பொருத்தம் எவ்வாறு பார்ப்பது?

பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதையாக வந்தால் பொருத்தம் இல்லை. மற்றவை பொருத்தமானவை, ஒன்றுக்கொன்று வேதையாக உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் இதோ,

அஸ்வினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகிணி – சுவாதி
திருவாதிரை – திருவோணம்
புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி
உத்திரம் – பூரட்டாதி
அஸ்தம் – சதயம்

மேலே உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுகொன்று பொருந்தாதவை, இந்த நட்சத்திரங்களை இணைக்கக்கூடாது. அதே போல மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திரங்கள் மூன்றும் ஒன்றுக்கொன்று வேதை ஆகும்.

கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க இந்த வேதை பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும். தம்பதிகளின் வாழ்வில் ஏற்பட போகும் துன்பங்களையும், துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழ வைக்கும் சக்தி கொண்டது இந்த வேதைப் பொருத்தமாகும். வேதை என்றால் துன்பநிலை என்றும் அர்த்தம். எனவே, வேதையில் இருக்கும் நட்சத்திரங்களை இணைக்க கூடாது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் சமோசா

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி தேவையான பொருள்கள் சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது) இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது ) எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு மைதா...
மாம்பழ பாயாசம்

சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம் தேவையான பொருட்கள் மாம்பழ விழுது - ஒரு கப் மாம்பழ துண்டுகள் - ½ கப் சர்க்கரை – ½ கப் பால் - 1 லிட்டர் நெய் – சிறிதளவு ...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள்....
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.