மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை

மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருதாணி இட்டுகொள்வது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பின்வரும் பகுதிகளில் பாரக்கலாம்.

மருதாணி இலை பயன்கள்

மருதாணியின் ஆரோக்கிய நன்மைகள்

மருதாணியை கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து விடுகிறது.

தேமல் வராமல் தடுக்கும்

ஒரு சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல்கள் காணப்படும் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெகு விரைவில் அந்த கருந்தேமல்கள் மறையும்.

தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்

அரிப்பு, படை போன்ற சரும பிரச்சனை நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை பெரும் சங்கடத்தை கொடுக்கும். வெள்ளைபடுதல் பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைத்து 6 தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடித்து வர வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய் குணமாகும்.

வாய் புண்களை குணமாக்கும்

நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து பின் வாய் கொப்பளிக்கலாம். இப்படி செய்வதால் வாயில் உள்ள கிருமிகள் அழியும், புண்களும் ஆறும்.

அம்மை தழும்புகளை குணமாக்கும்

அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் குணமானாலும் அம்மை தழும்புகள் உடனே குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல் பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில் குணமாகும். வெயில்  கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று  போடலாம், விரைவில் குணமாகும்.

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும்

அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள் அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.

மருதாணி மருத்துவ பயன்கள்

நல்ல தூக்கம் வரும்

மருதாணி செடியின் வேர், நோயை நீக்கி உடலைத் தேற்றும், மருதாணி பூக்களைச் உலர்த்தி தலையணை போல் செய்து அதில் படுத்து வந்தால்  நல்ல தூக்கம் உண்டாவதுடன், பேன் பிரச்சனையும் குறையும்.

நகங்களை பாதுகாக்கும்

மருதாணி இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும் கால் நகங்களின் மீது வைத்து விடவேண்டும். பின்னர் காலையில் எழுந்து கழுவி விடவேண்டும். இவ்வாறு 15 நாளுக்கு ஒரு முறை செய்து வந்தால் நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
சிக்கன் சமோசா

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி தேவையான பொருள்கள் சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது) இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது ) எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு மைதா...
how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.