மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை

மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருதாணி இட்டுகொள்வது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பின்வரும் பகுதிகளில் பாரக்கலாம்.

மருதாணி இலை பயன்கள்

மருதாணியின் ஆரோக்கிய நன்மைகள்

மருதாணியை கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து விடுகிறது.

தேமல் வராமல் தடுக்கும்

ஒரு சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல்கள் காணப்படும் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெகு விரைவில் அந்த கருந்தேமல்கள் மறையும்.

தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்

அரிப்பு, படை போன்ற சரும பிரச்சனை நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை பெரும் சங்கடத்தை கொடுக்கும். வெள்ளைபடுதல் பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைத்து 6 தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடித்து வர வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய் குணமாகும்.

வாய் புண்களை குணமாக்கும்

நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து பின் வாய் கொப்பளிக்கலாம். இப்படி செய்வதால் வாயில் உள்ள கிருமிகள் அழியும், புண்களும் ஆறும்.

அம்மை தழும்புகளை குணமாக்கும்

அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் குணமானாலும் அம்மை தழும்புகள் உடனே குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல் பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில் குணமாகும். வெயில்  கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று  போடலாம், விரைவில் குணமாகும்.

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும்

அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள் அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.

மருதாணி மருத்துவ பயன்கள்

நல்ல தூக்கம் வரும்

மருதாணி செடியின் வேர், நோயை நீக்கி உடலைத் தேற்றும், மருதாணி பூக்களைச் உலர்த்தி தலையணை போல் செய்து அதில் படுத்து வந்தால்  நல்ல தூக்கம் உண்டாவதுடன், பேன் பிரச்சனையும் குறையும்.

நகங்களை பாதுகாக்கும்

மருதாணி இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும் கால் நகங்களின் மீது வைத்து விடவேண்டும். பின்னர் காலையில் எழுந்து கழுவி விடவேண்டும். இவ்வாறு 15 நாளுக்கு ஒரு முறை செய்து வந்தால் நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன் திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார...
திரிபலா எப்படி சாப்பிட வேண்டும்

உடல் நோய்களை தீர்க்கும் திரிபலா

உடல் நோய்ளை தீர்க்கும் திரிபலா    நம் அன்றாட வேலைகளை திறம்பட செய்ய உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகும். அதற்கு சத்தான உணவு, உடற்பயிற்சி முறையான மற்றும் கட்டுப்பாடான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.