மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை

மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருதாணி இட்டுகொள்வது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பின்வரும் பகுதிகளில் பாரக்கலாம்.

மருதாணி இலை பயன்கள்

மருதாணியின் ஆரோக்கிய நன்மைகள்

மருதாணியை கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து விடுகிறது.

தேமல் வராமல் தடுக்கும்

ஒரு சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல்கள் காணப்படும் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெகு விரைவில் அந்த கருந்தேமல்கள் மறையும்.

தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்

அரிப்பு, படை போன்ற சரும பிரச்சனை நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை பெரும் சங்கடத்தை கொடுக்கும். வெள்ளைபடுதல் பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைத்து 6 தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடித்து வர வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய் குணமாகும்.

வாய் புண்களை குணமாக்கும்

நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து பின் வாய் கொப்பளிக்கலாம். இப்படி செய்வதால் வாயில் உள்ள கிருமிகள் அழியும், புண்களும் ஆறும்.

அம்மை தழும்புகளை குணமாக்கும்

அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் குணமானாலும் அம்மை தழும்புகள் உடனே குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல் பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில் குணமாகும். வெயில்  கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று  போடலாம், விரைவில் குணமாகும்.

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும்

அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள் அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.

மருதாணி மருத்துவ பயன்கள்

நல்ல தூக்கம் வரும்

மருதாணி செடியின் வேர், நோயை நீக்கி உடலைத் தேற்றும், மருதாணி பூக்களைச் உலர்த்தி தலையணை போல் செய்து அதில் படுத்து வந்தால்  நல்ல தூக்கம் உண்டாவதுடன், பேன் பிரச்சனையும் குறையும்.

நகங்களை பாதுகாக்கும்

மருதாணி இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும் கால் நகங்களின் மீது வைத்து விடவேண்டும். பின்னர் காலையில் எழுந்து கழுவி விடவேண்டும். இவ்வாறு 15 நாளுக்கு ஒரு முறை செய்து வந்தால் நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆண் மலட்டு தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு - பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பரிகாரம்

புனர்பூ தோஷம் திருமணத்திற்கு மணப்பெண் மற்றும் மணமகன் ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் பார்க்கபடுகிறது. இவ்வகையான தோஷங்களையெல்லாம் பார்க்கும் போது புனர்பூ தோஷம் இருக்கிறதா என யாரும் பார்க்க மாட்டார்கள்....
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.