நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள்

நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு செல்லும்போது தண்ணீரில் முழ்கி பதட்டத்தில் வேகமாக சுவாசித்து, தண்ணீரைக் குடித்து விடுவார்கள். இதனால் நுரையீரலுக்குள் தண்ணீர் நுழைந்துவிடும். இதனால் பிராணவாயு இருக்க வேண்டிய இடத்தில் தண்ணீர் இருக்கும், இதனால் மூளைக்கு தேவையான பிராண வாயு கிடைக்காது.

நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

இதன் காரணமாக அந்த நபரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கிவிடுவார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிவிடும். இதனால் அவர் உயிர் இழப்பதற்கு முன்பு சரியான முதலுதவி அளிக்க வேண்டும். இந்நிலையில் நீரில் மூழ்கியவருக்கான  முதலுதவிகள் செய்து உயிர் போகும் நிலையில் உள்ள நபரை எவ்வாறு காப்பாற்றுவது என வாருங்கள் பார்ப்போம்.

நீரில் முழ்கியவரை காப்பாற்றும் வழிமுறைகள்

1. தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற அணுகுதல், கையால் இழுத்தல், எறிதல், கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல் போன்ற ஐந்து முதலுதவி முறைகளை பின்பற்ற வேண்டும்.

2. நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றவும், முதலுதவி செய்யவும் முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் அவசரகதியில் இதில் ஈடுபடக் கூடாது.

3. பாதிக்கப்பட்ட நபர் நல்ல நினைவோடு இருந்து தண்ணீரில் தத்தளிக்கிறார் எனில் அவருக்கு கம்பு, கயிறு, நீளமான குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் எதாவது ஒன்றை நீட்டி, அதைப் அவர் பிடித்துக்கொள்ள செய்து, மெதுவாக அதை உங்கள் பக்கமாக இழுங்கள். இதை நீங்கள் செய்யும்போது கவனமாக இருக்கவும், ஏனெனில் தண்ணீரில் தத்தளிக்கும் நபர், பதற்றத்தில் வேகமாக இழுத்து உங்களைத் தண்ணீருக்குள் இழுக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் கவனமாக இருக்கவும்.

4. பாதிக்கப்பட்ட நபர் தண்ணீரில் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் எனில், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களான கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவரை நோக்கி சரியாக வீச வேண்டும். அதைப் பிடித்து கொண்டு அவர் கரைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

5. ஒருவேளை பாதிக்கபட்ட நபர் தண்ணீரில் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள், தண்ணீரில் குதித்து அவரைக் காப்பாற்ற கவனத்துடன் முயற்சி செய்யலாம்.

6. காப்பற்றப்பட்ட நபர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தால் அவரின் முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். பாதிக்கபட்ட நபரை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அவரின் வாயோடு நமது வாயைப் வைத்து பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது பாதிக்கபட்டவரின் நபரின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும்.

7. பாதிக்கப்பட்ட நபரின் இதயம் இயங்காமல் இருந்தால், அவரிடம் நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் அவரின் மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்று சேர்த்து நன்றாக ஊன்றி அழுத்தும்போது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீர், வாய் மற்றும் மூக்கு வழியே வெளியேறும்.

நீரில் தத்தளிபவருக்கான முதலுதவிகள்

8. நீரில் மூழ்கியவரை காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது நபரின் தலையை தண்ணீரி மட்டத்திற்கு சிறிது மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், தண்ணீரில் இருக்கும் அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

9. தண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் மற்றும் இதய துடிப்பு இல்லை எனில், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்ய கூடாது. மூச்சுத் விடுவதில் பிரச்சனை , இதயம் செயல்படாமல் இருப்பது இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, பதற்றபடாமல் முறையான முதல் உதவி செய்து, பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றி விடலாம். எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக தேவையான முதல் உதவிகள் செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிக்க வேண்டும்.

10. எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கபட்ட நபரின் வயிற்றை அழுத்தக் கூடாது. திரைப்படங்களில் தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை. இதை செய்யகூடாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில்...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...
மீன் வறுவல்

சுவையான மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

மீன் மிளகு வறுவல் மீன் ஒரு சத்தான ஆரோக்கியமான உணவாகும். மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு,...
நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.