கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய்

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள் ஏராளமாக உள்ளது. கடுக்காயானது கற்காடக சிங்கி, அமிர்தம் போன்ற பெயர்களாலும் அழைக்கபடுகிறது. கடுக்காய் மருத்துவ நன்மைகள் அதிகம் கொண்டது.

கடுக்காய் மருத்துவ நன்மைகள்

சித்த மருத்துவத்தில் கடுக்காய்

கடுக்காய் ஏராளமான மருத்துவத் தன்மைகள் கொண்டது. கடுக்காயை வட மொழியில் ‘மருத்துவர்களின் காதலி’ என்று அழைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் ‘திரிபாலா’ என்ற கூட்டு மருந்தாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். கடுக்காய் எல்லா நாட்டு மருந்துக்கு கடைகளிலும் மிக எளிதாகப் கிடைக்கும். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பை பயன்படுத்தக் கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

கடுக்காயை மட்டுமே உண்டு உயிர் வாழலாம் என்று பழைய சித்த மருத்துவப் பாடல் கடுக்காயின் புகழை பாடுகிறது. இன்னொரு சித்த மருத்துவப் பாடலில் காலையில் இஞ்சி, பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் என ஒரு மண்டலம் உண்டால் ‘கோலை ஊன்றி குறுகி நடப்பவரும் கூட காலை வீசி குலுங்கி நடப்பாராம்’ என்று கடுக்காயின் சிறப்பை கூறுகிறது.

கடுக்காய் மருத்துவப் பயன்கள்

நீண்ட அயுளை பெறலாம்

தினமும் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பு சக்தியை தேவையான அளவு பெற்று விடலாம். கடுக்காய் தூளை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீண்ட ஆயுளை பெறலாம்.

மலமிளக்கியாக செயல்படும்

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மறுநாள் மலம் இளகி வெளியேறும்.

வயிற்று வலியை குறைக்கும்

குழந்தைகள் வயிற்று வலியால் அழுகின்ற சமயங்களில் கடுக்காயை இழைத்து வயிற்றில் பற்றுப் போல போட்டால் வயிற்று வலி பறந்து போய்விடும்.

வயிற்று பிரச்சனைகள் சரியாகும்

15 கிராம் கடுக்காய்த் தூள், பதினைந்து கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடித்தால் நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சனைகள் எல்லாம் பறந்தோடும்.

தோல் பிரச்சனைகளை தீர்க்கும்

தோலில் படை, நமைச்சல் உள்ளவர்கள் கடுக்காயை சந்தனக் கல்லில் அரைத்து பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தோல் பிரச்சனைகள் நாளடைவில் மறைந்து விடும்.

உடலை பலப்படுத்தும்

கடுக்காய் ஓட்டை தூளாக்கி இரவு சாப்பிட்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் வாயில் போட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்து வந்தால் உடல் வலு பெறும்.

வாத பித்த நோய்கள் பறந்தோடும்

கடுக்காய்த் தூள் 10 கிராம் எடுத்து கொண்டு, அதே அளவு சுக்கு, மற்றும் திப்பிலி தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதம், மற்றும் பித்த நோய்கள் சரியாகும்.

ஆரோக்கியம் கூடும்

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவை சேர்ந்ததுதான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

தலைமுடி உதிர்வை தடுக்கும்

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை ஒன்றாக கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு சரியாகும்.

பல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு

கடுக்காய்ப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால், பற்கள் உறுதியாகும். ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும்.

கண் பிரச்சனைகள் சரியாகும்

25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியுடன், ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் அதை குடித்து வந்தால், கண் நோய்கள் குணமாகும்.

வயிற்று புண்கள் குணமாகும்

20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண்கள் குணமாகும்.

நோய்களை குணபடுத்தும்

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் அனைத்தையும் ஆற்றிடும் வல்லமை பெற்றது. பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்

3 கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால், ஜீரணசக்தி அதிகரிக்கும்.

நெற்றி புண்களை ஆற்றும்

குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால்  ஒரு சில பெண்களுக்கு  நெற்றியில் புண் வந்து விடும். அப்படிப்பட்டவர்கள் கடுக்காயை இழைத்துப் அந்த புண்களின் மீது பற்றுப் போட்டால் அந்தப் புண்கள் ஆறிவிடும்.

கடுக்காய் மருத்துவ பயன்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, நாக்கில் சுவையின்மை, பித்த மற்றும் வாத நோய்கள், வாய், நாக்கு, மூக்கு, தொண்டை, இரைப்பை, குடல், ஆசனவாய் போன்ற இடங்களில் ஏற்படும் புண்களை ஆற்றும். மேலும் அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்கள், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்தும் குணமாக இறைவன் அருளிய ஒரு மிகப்பெரிய அருமருந்து கடுக்காயாகும்.

காய கல்ப மூலிகை கடுக்காய்

இவை மட்டும் அல்ல, கடுக்காய்த் துவையல் மலத்தைக் கட்டும். கடுக்காய் லேகியம் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும். அதுவே ஒரு காயகல்ப மூலிகை தான். மொத்தத்தில் என்றும் இளமையுடன் இருந்து மரணத்தை நெருங்க விடாமல் தடுக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். இது உடலில் இருக்கும் செல்களை வெகு நாட்களுக்கு உயிர்ப்புடன் வைத்திருப்பதால் முதுமை மட்டும் அல்ல மரணமும் நம்மை அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.