ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை

ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது சிவப்பு ரோஜா இதழ் நிறமான பூக்களைக் கொண்டது, மற்றும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போன்று இருக்கும். பெரும்பாலும் ½ அடிக்கும் குறைவாக வளரும்.

ஓரிதழ்த்தாமரை பெயர் காரணம்

ஒரே இதழை கொண்ட பூ என்பதால், ‘ஓரிதழ்’ என்றும், தாமரைப் பூவின் நிறத்தோடு ஒத்து உள்ளதால் தாமரை என்ற இரண்டு சொற்களும் இணைந்து ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை வேறு பெயர்கள்

ஓரிதழ்த்தாமரைக்கு சூர்யகாந்தி, ரத்தினபுருஷ், ரத்னாயுரஷரி ஆகிய வேறு இந்த தாவரத்திற்கு உண்டு. ஓரிதழ்த்தாமரை இலைகளை வாயிலிட்டு மென்றால் அவை கொழகொழப்பான பசைபோல மாறும்.

ஓரிதழ்த்தாமரையில் பயன்படும் பாகங்கள்

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் உட்பட முழுச் செடியுமே ஏராளமான மருத்துவக்குணம் கொண்டது.

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

இளைத்த உடலை வலுபடுத்தும்

ஓரிதழ்தாமரை ஒரு காயகல்ப மூலிகை. முழு தாவரமும் உடலில் வெப்பத்தை நீக்குகிறது; சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது. ஓரிதழ்தாமரை மயக்கமடைவதை நிறுத்தவும், மேகமூட்டத்திற்கான சிகிச்சையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மெலிந்த உடலை வலுப்படுத்த ஓரிதழ்தாமரை டானிக்குகள் மற்றும் மாத்திரைகளில் சேர்க்கப்படுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் எரிச்சல் நீங்கும்

முழுத்தாவரத்தையும் பச்சையாகப் பறித்து, பேஸ்ட் போல செய்து, 1 கப் காய்ச்சாத பசும்பாலில் தினமும் ஒரு எலுமிச்சை பழ அளவு கலந்து குடிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் நரம்புத் தளர்ச்சி மற்றும் எரிச்சல் நீங்க 48 நாட்கள் தொடர்ந்து இதைச் குடித்து வர வேண்டும்.

இளமையை தக்கவைக்கும்

பொருளாதார பிரச்சனைகள், உணவு முறை, சமூக சூழல் காரணமாக சில இளைஞர்களுக்கு சிறு வயதிலேயே முதியவர்கள் போன்ற தோற்றம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் முதுமை தோற்றம் நீங்கி இளமையோடு இருக்கலாம்.

வெள்ளைப்படுதல் குணமாகும்

வெள்ளைப்படுதல் குணமாக ஓரிதழ்த்தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகியவற்றைச் சமமாக, ஒருபிடி அளவு எடுத்து, அரைத்துப் பசையாக்கி, 1 டம்ளர் தயிருடன் சேர்த்துக் கலக்கி, காலையில் மட்டும் குடித்துவர வேண்டும். 10 நாட்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்யலாம். அந்த நேரங்களில் காரம், புளிப்பு அதிகம் இல்லாத உணவாக உட்கொள்ள வேண்டும்.

புண்கள் மற்றும் காயங்களை ஆற்றும்

புண்கள் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு, முழு செடியுடன் சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் கோரோசனை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)  கலந்து பேஸ்ட் போல செய்து, நெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

ஒரிதழ்த்தமரை மருத்துவ குணங்கள்

எடையை குறைக்க உதவும்

ஒரிதழ்த்தாமரையை கஷாயம் போல செய்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்ல நிவாரணம் கிடைக்கும். எடை குறைக்க வேண்டும் என்று நினைபவர்கள் இந்த கஷாயத்தை அருந்தி வரலாம்.

ஆரோக்கியத்தை மீட்டெக்கும்

தாது உருவாக்கும் தனி மேகத்தை நீக்குகிறது…. ஓரிதழ்த் தாமரையுன்” இளமைப் பருவத்தில் கட்டுக்கடங்காத காம நினைவுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதனால் உடல் மெலிந்து போன இளைஞர்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஆற்றல் ஓரிதழ்தாமரைக்கு உண்டு என்பதை நமது மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆண்மையை பெருக்கும்

ஓரிதழ்தாமரை செடியில் செய்யப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் இது ஆண்களுக்கு விந்துச்சுரப்பைத் தூண்டி தாம்பத்திய உறவில் உள்ள ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை, தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாமை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த ஒரிதழ்தாமரை நல்ல பலன் தரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
தினப் பொருத்தம் என்றால் என்ன

தினப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

தினப் பொருத்தம் என்றால் என்ன? தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...
சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள்

அக்கரகாரம் மூலிகை பயன்கள்

அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும்,...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.