திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும் இதை வெறும் திருஷ்டி கழிப்பதற்கான ஒரு சம்பிரதாயம் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது வெறும் திருஷ்டி கழிப்பதற்காக மட்டும் உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

இதற்கு பல அறிவியல் காரணங்கள் உண்டு. தம்பதிகளுக்கு தீய சக்திகளினால் தீமைகள் ஏற்படாமல் இருக்கவும், கண் திருஷ்டி ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை போக்கவும் இந்த ஆரத்தியானது எடுக்கப்படுகிறது.

ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

ஆரத்தி எதற்காக?

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களில் ஒன்று ஆரத்தி எடுப்பது. ஆரத்தி எடுப்பது பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களில் காணலாம். ஆரத்தி எடுப்பதால் கண் திருஷ்டி நீங்கும் என நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதன் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதாகும்.

ஆரத்தி வேறு எங்கெல்லாம் எடுக்கபடுகிறது?

ஆரத்தி தூர பயணம் முடித்து வருபவர்கள், புதிதாக திருமணம் முடித்த மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் மற்றும் குழந்தை, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வருபவர்கள்  ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை நமது வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுக்கும் முறை

ஆரத்தி எப்படி எடுக்கபடுகிறது?

ஆரத்தி எடுப்பதற்கு முதலில் தாம்பாளத் தட்டில் மஞ்சளும் (லட்சுமி), சுண்ணாம்பும் (சரஸ்வதி) வைத்து எடுத்து கொள்ள வேண்டும். அந்த மஞ்சளையும், சுண்ணாம்பையும் சிறிது தண்ணீர் விட்டு கலக்க வேண்டும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும். பின்பு இதன் மேல் ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும். இதை ஆரத்தி எடுக்க போகிறவரின் உடலை 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஏன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு?

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுண்டு. இது உடலிலுள்ள உள்ள கண்ணுக்கு தெரியாத விஷ கிருமிகளை அழிக்கிறது. ஆரத்தி சுற்றிய பின் அந்த ஆரத்தி எடுத்த நீரை கொட்டிவிட வேண்டும். யார் காலிலும் படாதபடி ஏதேனும் செடிக்கும் ஊற்றலாம்.

வாசலில் வைத்து ஆரத்தி எடுப்பது ஏன்?

வெளியில் இருந்து வரும்போது உடலில் பல நச்சு கிருமிகள் தொற்றியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். இதனால் அவர்களுக்கு உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால் தான் சம்பந்தப்பட்டவர்களை வாசலிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.

பலரும் இது ஓர் மூடநம்பிக்கை, வீண் சடங்கு என நினைத்து கொண்டிருகின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் செய்த செயல்களில் பல மருத்துவமும், அறிவியலும் மறைந்துள்ளது என்பது பலருக்கும் புரிவதில்லை.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
பெண் கால் மச்ச பலன்கள்

பெண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கால் மச்ச பலன்கள் சாமுத்திரிக லட்சனப்படி ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருந்தால் அவருக்கு என்ன பலன்கள் உண்டாகும் என குறிப்பிடப்பட்டிற்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் பெண் பாதம், மூட்டு,...
கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள்...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.