ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை கொண்டவர்கள். இவர்கள் எளிதில் கோபம் அடைய கூடியவர்களாக இருப்பார்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

 

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பான்மையோர் செல்வச் செழிப்புடன் வாழும் குடும்ப அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு நல்ல அழகான மனைவி அமையும். எப்போதும் மன நிம்மதியுடன் வாழ ஆசைபடுவார்கள். இவர்கள் கணக்கு புலியாக இருப்பார்கள். இவர்கள் சூழல் சிறு வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். தாரளமாக செலவு செய்ய விருப்பம் கொண்டவர்கள். இதனால் பணச்சிக்கலை இவர்களே உருவாக்கி கொள்வார்கள். இவர்களுக்கு சிற்றின்ப ஆசை அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகம் கொண்டவர்கள்.

இவர்கள் எல்லோரிடமும் நட்பு பாராட்டவே விரும்புவார்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை பொறுமையாக கையாளகூடியவராக இருப்பார்கள். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக பேச கூடியவர்கள். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தான் மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவர்களும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். யாரையும் நம்ப வைத்து ஏமாற்ற மாட்டார்கள்.

இவர்களின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். கலை சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு அதிக லாபம் தரும். தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள், பேசி பேசியே மற்றவர்களை மயக்கி விடுவார்கள். இளகிய மனமும், இரக்க சுபாவமும் கொண்டவர்கள். நல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்ளவே விரும்புவார்கள். சமுகத்தில் இவர்கள் நல்ல பெயரும், புகழும் பெறுவார்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை, மேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து வருவார்கள். வரக்கூடிய வாழ்க்கை துணை சிறிது பிடிவாத குணமும், எடுத்த கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தின் மேல் அதிக பற்று கொண்டவர்கள். மனைவியாக இருந்தால் கணவனிடமோ, கணவனாக இருந்தால் மனைவியிடமோ அதிக பற்றுடன் இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்கள் உத்தியோகத்தில் இருந்தால் பெரிய பதவிகளை வகிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் பதட்டபடமாட்டார்கள்.

சமுக மற்றும் குடும்ப கடமைப் பொறுப்புக்களை தவறாமல் செய்வார்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க விரும்புவார்கள். தன்னை போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகுதான் இவர்களுக்கு சொந்த வீடு, மனை, வாகன வசதி, பூமி லாபம் போன்றவை ஏற்படும். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். இவர்களின் திருமண தடை நீங்க முருகனை வழிபடலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சுவாதி நட்சத்திரத்தின் இராசி : துலாம் சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான் சுவாதி நட்சத்திரத்தின்...
பித்ரு தோஷம் போக்கும் ருத்ர கயா

21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா

21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா  அமாவாசை தினத்தன்று முன்னோர் வழிபாடு செய்வதன் மூலமாக பித்ரு சாபம் எதுவும் இருந்தால் அவை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், 21 தலைமுறையினரின் சாபங்களை போக்கும்...
செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...
தந்துரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் தொடை பகுதி – 4 தயிர் - ஒரு கப் ...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.