ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை கொண்டவர்கள். இவர்கள் எளிதில் கோபம் அடைய கூடியவர்களாக இருப்பார்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

 

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பான்மையோர் செல்வச் செழிப்புடன் வாழும் குடும்ப அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு நல்ல அழகான மனைவி அமையும். எப்போதும் மன நிம்மதியுடன் வாழ ஆசைபடுவார்கள். இவர்கள் கணக்கு புலியாக இருப்பார்கள். இவர்கள் சூழல் சிறு வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். தாரளமாக செலவு செய்ய விருப்பம் கொண்டவர்கள். இதனால் பணச்சிக்கலை இவர்களே உருவாக்கி கொள்வார்கள். இவர்களுக்கு சிற்றின்ப ஆசை அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகம் கொண்டவர்கள்.

இவர்கள் எல்லோரிடமும் நட்பு பாராட்டவே விரும்புவார்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை பொறுமையாக கையாளகூடியவராக இருப்பார்கள். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக பேச கூடியவர்கள். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தான் மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவர்களும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். யாரையும் நம்ப வைத்து ஏமாற்ற மாட்டார்கள்.

இவர்களின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். கலை சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு அதிக லாபம் தரும். தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள், பேசி பேசியே மற்றவர்களை மயக்கி விடுவார்கள். இளகிய மனமும், இரக்க சுபாவமும் கொண்டவர்கள். நல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்ளவே விரும்புவார்கள். சமுகத்தில் இவர்கள் நல்ல பெயரும், புகழும் பெறுவார்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை, மேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து வருவார்கள். வரக்கூடிய வாழ்க்கை துணை சிறிது பிடிவாத குணமும், எடுத்த கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தின் மேல் அதிக பற்று கொண்டவர்கள். மனைவியாக இருந்தால் கணவனிடமோ, கணவனாக இருந்தால் மனைவியிடமோ அதிக பற்றுடன் இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்கள் உத்தியோகத்தில் இருந்தால் பெரிய பதவிகளை வகிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் பதட்டபடமாட்டார்கள்.

சமுக மற்றும் குடும்ப கடமைப் பொறுப்புக்களை தவறாமல் செய்வார்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க விரும்புவார்கள். தன்னை போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகுதான் இவர்களுக்கு சொந்த வீடு, மனை, வாகன வசதி, பூமி லாபம் போன்றவை ஏற்படும். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். இவர்களின் திருமண தடை நீங்க முருகனை வழிபடலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
sinus remedies

சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், மற்றும் அதற்கான தீர்வுகள்

சைனஸ் பாதிப்பிற்கான தீர்வுகள் சைனஸ் என்றால் என்ன ? சைனஸ் என்பது மூக்கின் இரு பக்கங்களிலும் சளி நிறைந்து இருப்பதே ஆகும். இது ஒரு விதமான ஒவ்வாமையாகும். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.