அமாவாசை திதி பலன்கள், அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

அமாவாசை திதி

அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும்.

அந்த நேரத்தில் இந்த இரண்டு கிரகங்களின் ஆகர்ஷன சக்தி அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் மனித மூளையில் வேகமாக மாற்றங்கள் ஏற்படும். மனமானது கொந்தளிப்பான நிலையில் இருக்கும். எனவே அந்த நாட்களில் புதிய காரியங்களை தொடங்ககூடாது என கூறுவார்கள்.

அமாவாசை திதி

அமாவாசை திதியின் சிறப்புகள்

அமாவாசை தினம் வரும் போது கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதை பார்த்திருப்போம். அதற்கு காரணம் அன்றைய தினத்தில் தெய்வங்கள் மற்ற நாட்களை காட்டிலும் அதிக சக்தியுடன் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் தான் அமாவாசையில் சிறப்பு பூஜைகள் செய்யபடுகின்றன.

அமாவாசை தினத்தில் தேவதைகள், மகரிஷிகள், காலம் சென்ற நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருகை தந்து புண்ணிய நதிகளிலும், கடலோரத்திலும், காசி, ராமேஸ்வரம், கயா போன்ற புண்ணிய தலங்களிலும் செய்யப்படும் தர்ப்பன பூஜையை ஏற்று கொள்கின்றனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

அமாவாசை திதியில் பிறந்தவர்கள் நல்ல திறமை உடையவர்கள். இவர்களுக்கு சுயநலம் இருக்காது. தயாள சிந்தனை உடையவர்கள், சத்தியம் தவறாதவர்கள், இவர்களின் திறமைக்கான அங்கீகாரம் தாமதமாக கிடைக்கும், எதிலும் தன்னை முன்னிலைபடுத்தும் செயலையே செய்வார்கள், தனக்கு தேவையானதை தாங்களே தேடிகொள்வார்கள், எந்நேரமும் சிந்தித்து கொண்டே இருப்பார்கள், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள், பெற்றோரை நேசித்து மரியாதை கொடுக்ககூடியவர்கள், நுட்பமான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

அமாவாசை திதியில் என்னென்ன செய்யலாம்

அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம், குலதெய்வ வழிபாடு செய்யலாம், திருஷ்டி கழிக்கலாம், கோவிலுக்கு செல்வது போன்றவற்றை செய்யலாம்.

அமாவாசை திதியில் என்ன செய்யகூடாது

அமாவாசை திதியில் பூமி பூஜை போடக்கூடாது. சுபநிகழ்ச்சிகள் செய்யகூடாது, நகைகள் வாங்ககூடாது, புதிய முயற்சிகளை செய்யகூடாது, கிரகபிரவேசம் செய்யகூடாது, புதிய வாகனங்கள் வாங்ககூடாது, வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.

அமாவாசை திதிக்கான தெய்வங்கள்

அமாவாசை திதிக்கான தெய்வங்கள் : பித்ருக்கள், சக்தி, மற்றும் வருணன்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...
coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.