திருமணப்பெண் புகுந்த வீட்டில் முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறுவடைக்கு தயாராகி மகசூல் கொடுக்கும்.

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

ஆனால், திருமணம் என்பது எல்லா காலத்திலும், வரும் பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் ஒரு பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். நம் முன்னோர்கள் வாழ்வியலை இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலங்காலமாக பலன் அளிக்கக்கூடிய ஒன்று. கணவன் – மனைவி இருவரும் அடுத்து வரும் ஜென்மங்களிலும் மனம் ஒத்து இணைபிரியாமல் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறினர்.

இதற்கு ஒரு பிரபலமான பாடல் உண்டு, அது
மணமகளே மருமகளே வா வா உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா வீட்டில்
குத்துவிளக்கேற்றி வைப்பாய் வா வா
இதில் இருந்தே குத்துவிளக்கு ஏற்றுவதன் அவசியத்தை உணரலாம்.

வீட்டிற்கு உள்ளே வந்து விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. நம் முன்னோர் காலத்திலிருந்தே வலது கால் முன் வைத்து செல்வது சுபம் தரும் என்ற எண்ணம் உண்டு. திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள் முதன் முதலில் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா? குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் முறையே அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது. மேலும் அது ஐந்து கீழ்கண்ட கடவுள்களையும் குறிக்கிறது.

தாமரைப் பீடம் – பிரம்மா.

நடுத்தண்டு பகுதி – விஷ்ணு.

நெய் எரியும் அகல் – சிவன்.

தீபம் – திருமகள்.

சுடர் – கலைமகள்.

எனவே, திருமணம் முடிந்து முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் இந்த குத்துவிளக்கை போல ஐந்து வகை நற்குணங்களையும் நான் கொண்டிருப்பேன் என்று உறுதி செய்வதற்காக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.

மணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுதல்

குத்துவிளக்கை ஏற்றிய பின், குத்துவிளக்கில் உள்ள ஐந்து தெய்வங்களையும் வணங்கி, விளக்கில் இருந்து வரும் ஒளியில் வீடு எப்படி பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் குத்து விளக்கை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இணைந்ததுதான் திருமண வாழ்க்கை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். புரிந்து கொள்ளாதவர்கள் தோல்வி அடைகிறார்கள்.

கணவன், மனைவி உறவு என்பதே ஒரு நட்புதான். இந்த நட்பு வாழ்வில் சரியாக அமைந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்வில் ஊக்கம் தந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முடக்கத்தான் பயன்கள்

மூட்டு வலியை குணப்படுத்தும் முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரை துவையல் முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய், பக்கவாதம்  போன்ற நோய்கள்...
ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி - கன்னி :...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு...
ராசி பொருத்தம் என்றால் என்ன

ராசி பொருத்தம் என்றால் என்ன?

ராசி பொருத்தம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படுகிறது. இது சந்திர லக்னம் என்று அழைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் உடல் ஆரோக்கியம், மக்கள்பேறு, நீண்ட...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.