கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா

நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன என்றும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. உண்மையில் உறக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா, பலிக்காதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகள் பலிக்கும் என்று கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணும் கனவுக்கு நிச்சயம் பலனுண்டு என்று கூறுகிறது. இவற்றை பற்றி விரிவாக காணலாம்.

கனவுகள் பலிக்குமா

எந்த நேரத்தில் வரும் கனவு பலிக்கும்

நாம் காணும் கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். மாலை 6 மணிமுதல் 8.24 மணிக்குள் வரும் கனவு ஒரு வருடத்திலும் இரவு 8.24 மணிமுதல் 10.48 மணிக்குள் வரும் கனவு 3 மாதத்திலும், இரவு10.48 மணிமுதல் நள்ளிரவு 1.12 மணிக்குள் வரும் கனவு 1 மாதத்திலும், நள்ளிரவு 1.12 மணி முதல் அதிகாலை 3.36 மணிக்கு வரும் கனவு 10 நாளிலும், அதிகாலை 3.36 மணிமுதல் விடியல் காலை 6.00 மணிக்குள் வரும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என பஞ்சாங்க சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளன. பகலில் காணும் கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லையாம்.

எவ்வாறான கனவுகள்

நாம் காணும் எல்லா கனவுகளும் நிச்சயம் பலிப்பதில்லை. மாறாக சில கனவுகள் வந்த உடனே மறைந்து விடும். மேலும் ஒரு சில கனவுகளை நம்மால் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. மேலும் ஒரு சில கனவுகள் பசுமரத்தாணி போல் நம் மனதில் நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும். நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு சில பயங்கர கனவுகள் வந்து திடுக்கிட்டு எழுவோம். அவை இது போன்ற கனவுகளாகும்.

கனவுகள் உண்மையா

மேலும் ஒரு சிலருக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு கனவுகள் மூலம் முன்னதாகவே காட்டி கொடுக்கும். கனவின் பலன்கள் நிறைய உண்டு. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், அமானுஷ்யங்கள், பூச்சிகள், முன்னோர்கள், பூக்கள், பழங்கள், பரிகாரங்கள் என அவற்றில் சில கனவுகள் நமக்கு வந்து போகின்றன. அந்த கனவின் அர்த்தம் தெரியாமல் தவிப்போம். அவற்றிற்கான அர்த்தம் தெரியவே இந்த தொகுப்பு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறால் மிளகு வறுவல்

ஸ்பைசி இறால் மிளகு தொக்கு செய்வது எப்படி

இறால் மிளகு தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1 கப் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி - 2  ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு...
நட்சத்திரங்களும் கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும் அஸ்வினி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். பரணி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
நட்சத்திர கணங்கள்

நட்சத்திர கணங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்

நட்சத்திர கணங்கள் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான கணங்கள் பற்றிய சில பொதுவான விஷயங்கள் குறித்து இப்பகுதியில் சற்று விரிவாக பார்ப்போம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம்...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.