பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய கனவுகள் அடிக்கடி தூக்கத்தில் வரும். அப்படி பல்வேறு வகையான பூக்களை கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பூக்கள் கனவு பலன்கள்
1. மல்லிகை பூ கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று பொருள்.
2. வெண் தாமரை / வெள்ளை தாமரை கனவில் வந்தால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும், கல்வி / செய்து வரும் வேலையில் உயர்வான நிலையை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
3. கர்ப்பிணி பெண்கள் கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற பூக்கள் வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
4. கர்ப்பிணி பெண்கள் கனவில் செம்பருத்தி, ரோஜா ஆகிய சிவப்பு நிற பூக்கள் வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
5. ரோஜா பூ கனவில் வந்தால் நீங்கள் ஏற்கனவே செய்த செயலுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மேலும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று அர்த்தம்.
6. முல்லை பூ கனவில் வந்தால் தாய் வழி உறவில் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
7. பன்னீர் பூ கனவில் வந்தால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம்.
8. பவளமல்லி கனவில் வந்தால் தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
9. சாமந்தி பூ கனவில் வந்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க போகிறது என்று பொருள்.
10. வாடாமல்லி பூ கனவில் வந்தால் உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
11. அல்லி பூ கனவில் வந்தால் மனைவி வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
12. மரம் அல்லது செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று அர்த்தம்.
13. பொதுவாக பூக்கள் கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும் என்று அர்த்தம்.

கனவு பலன்கள் பூக்கள்
14. மஞ்சள் நிற பூக்கள் கனவில் வந்தால், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தம்.
15. தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை இவற்றை மற்றவர்கள் கைகளில் இருந்து நாம் பெறுவது போல கனவு கண்டால் பெரும் புகழ் வந்து சேரும் என்று அர்த்தம்.
16. பூக்கள் பூத்துக் குலுங்குவது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
17. மலர்கள் வாடிப்போனது போல கனவு கண்டால், வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
18. மிகுந்த வாசம் உள்ள பூக்களை கனவில் கண்டால் திருமணம் கூடி வருகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
எண் கணிதம் எப்படி பார்ப்பது

எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதத்தை பார்ப்பது எப்படி?

எண் கணிதம் நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். 'எண்களை'...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.