பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய கனவுகள் அடிக்கடி தூக்கத்தில் வரும். அப்படி பல்வேறு வகையான பூக்களை கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பூக்கள் கனவு பலன்கள்
1. மல்லிகை பூ கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று பொருள்.
2. வெண் தாமரை / வெள்ளை தாமரை கனவில் வந்தால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும், கல்வி / செய்து வரும் வேலையில் உயர்வான நிலையை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
3. கர்ப்பிணி பெண்கள் கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற பூக்கள் வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
4. கர்ப்பிணி பெண்கள் கனவில் செம்பருத்தி, ரோஜா ஆகிய சிவப்பு நிற பூக்கள் வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
5. ரோஜா பூ கனவில் வந்தால் நீங்கள் ஏற்கனவே செய்த செயலுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மேலும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று அர்த்தம்.
6. முல்லை பூ கனவில் வந்தால் தாய் வழி உறவில் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
7. பன்னீர் பூ கனவில் வந்தால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம்.
8. பவளமல்லி கனவில் வந்தால் தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
9. சாமந்தி பூ கனவில் வந்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க போகிறது என்று பொருள்.
10. வாடாமல்லி பூ கனவில் வந்தால் உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
11. அல்லி பூ கனவில் வந்தால் மனைவி வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
12. மரம் அல்லது செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று அர்த்தம்.
13. பொதுவாக பூக்கள் கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும் என்று அர்த்தம்.

கனவு பலன்கள் பூக்கள்
14. மஞ்சள் நிற பூக்கள் கனவில் வந்தால், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தம்.
15. தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை இவற்றை மற்றவர்கள் கைகளில் இருந்து நாம் பெறுவது போல கனவு கண்டால் பெரும் புகழ் வந்து சேரும் என்று அர்த்தம்.
16. பூக்கள் பூத்துக் குலுங்குவது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
17. மலர்கள் வாடிப்போனது போல கனவு கண்டால், வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
18. மிகுந்த வாசம் உள்ள பூக்களை கனவில் கண்டால் திருமணம் கூடி வருகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.