அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால்

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும் அமில பாட்டில்களை தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் அறியாமல் குடித்துவிடவும், உடலின் மீது கொட்டிவிடவும் வாய்ப்பு உண்டு.

அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமிலங்கள் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும் மேலும் அரிப்பு ஏற்படும். கொப்புளம் ஏற்படவும் வாய்புகள் உண்டு. இதனால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம். ஒரு சிலர் அமிலத்தை தெரியாமல் குடித்து விடுவர். இதனால் குடித்தவருக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக் கூட விழுங்க முடியாது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம், மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படலாம். அது போன்ற சமயத்தில் அமில பாதிப்பு ஏற்பட்டவருக்கு எப்படிப்பட்ட முதலுதவிகள் செய்யலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம்,

அமில விபத்துக்கான முதல் உதவிகள்

அமிலத்தை குடித்துவிட்டால்

அமில பாதிப்பு ஏற்பட்டவரின் ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். வாயைத் நல்ல சுத்தமான தண்ணீரால் கொப்பளிக்க வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். மருத்துவமனைக்குச் செல்லும் போது, அந்த நபர் தவறுதலாக குடித்த அந்த அமில பொருளையும் எடுத்து செல்ல வேண்டும். மருத்துவர் அந்த அமிலத்தின் வீரியத்தை வைத்து தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வார். இதனால் சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

தோலில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

தோலில் அமிலம்பட்டிருந்தால், சுத்தமான தண்ணீரை வைத்து அமில பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவும் போது சோப்பை பயன்படுத்தகூடாது. ஏனெனில் சோப்பில் உள்ள வேதிபொருட்கள் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலில் வேதிவினை புரிந்து மேலும் சிக்கலை உண்டாக்கலாம்.

தோல் பகுதியில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கி பின்பு பிழிந்து, அதைத் பாதிப்பு ஏற்பட்ட தோலில் சுற்றலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

கண்களில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் நன்றாக கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் நன்றாக திறந்து மூடச் செய்யலாம்.
மேலும், இமைகளை விலக்கி, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் பாதிப்பு ஏற்படத் கண்ணில் சொட்டு மருந்தை எக்காரணம் கொண்டும் ஊற்றக்கூடாது.

சம்பந்தப்பட்டவரை வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். பின்பு மருத்துவமனையை நாடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....
5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை

ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். விதவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும் மட்டன் பிரியாணிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதுவும் ஒவ்வொரு பகுதிகேற்ப ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கபடுகிறது....
உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன? உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்தால் தான் நம் தோற்றம் அழகாகவும் உடல் உறுதியாகவும் ,...
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.