அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால்

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும் அமில பாட்டில்களை தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் அறியாமல் குடித்துவிடவும், உடலின் மீது கொட்டிவிடவும் வாய்ப்பு உண்டு.

அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமிலங்கள் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும் மேலும் அரிப்பு ஏற்படும். கொப்புளம் ஏற்படவும் வாய்புகள் உண்டு. இதனால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம். ஒரு சிலர் அமிலத்தை தெரியாமல் குடித்து விடுவர். இதனால் குடித்தவருக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக் கூட விழுங்க முடியாது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம், மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படலாம். அது போன்ற சமயத்தில் அமில பாதிப்பு ஏற்பட்டவருக்கு எப்படிப்பட்ட முதலுதவிகள் செய்யலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம்,

அமில விபத்துக்கான முதல் உதவிகள்

அமிலத்தை குடித்துவிட்டால்

அமில பாதிப்பு ஏற்பட்டவரின் ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். வாயைத் நல்ல சுத்தமான தண்ணீரால் கொப்பளிக்க வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். மருத்துவமனைக்குச் செல்லும் போது, அந்த நபர் தவறுதலாக குடித்த அந்த அமில பொருளையும் எடுத்து செல்ல வேண்டும். மருத்துவர் அந்த அமிலத்தின் வீரியத்தை வைத்து தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வார். இதனால் சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

தோலில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

தோலில் அமிலம்பட்டிருந்தால், சுத்தமான தண்ணீரை வைத்து அமில பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவும் போது சோப்பை பயன்படுத்தகூடாது. ஏனெனில் சோப்பில் உள்ள வேதிபொருட்கள் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலில் வேதிவினை புரிந்து மேலும் சிக்கலை உண்டாக்கலாம்.

தோல் பகுதியில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கி பின்பு பிழிந்து, அதைத் பாதிப்பு ஏற்பட்ட தோலில் சுற்றலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

கண்களில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் நன்றாக கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் நன்றாக திறந்து மூடச் செய்யலாம்.
மேலும், இமைகளை விலக்கி, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் பாதிப்பு ஏற்படத் கண்ணில் சொட்டு மருந்தை எக்காரணம் கொண்டும் ஊற்றக்கூடாது.

சம்பந்தப்பட்டவரை வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். பின்பு மருத்துவமனையை நாடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
அமாவாசை திதி

அமாவாசை திதி பலன்கள், அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

அமாவாசை திதி அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #10

ஜாதக யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது...
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பரிகாரம்

புனர்பூ தோஷம் திருமணத்திற்கு மணப்பெண் மற்றும் மணமகன் ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் பார்க்கபடுகிறது. இவ்வகையான தோஷங்களையெல்லாம் பார்க்கும் போது புனர்பூ தோஷம் இருக்கிறதா என யாரும் பார்க்க மாட்டார்கள்....
சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.