அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால்

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும் அமில பாட்டில்களை தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் அறியாமல் குடித்துவிடவும், உடலின் மீது கொட்டிவிடவும் வாய்ப்பு உண்டு.

அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமிலங்கள் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும் மேலும் அரிப்பு ஏற்படும். கொப்புளம் ஏற்படவும் வாய்புகள் உண்டு. இதனால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம். ஒரு சிலர் அமிலத்தை தெரியாமல் குடித்து விடுவர். இதனால் குடித்தவருக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக் கூட விழுங்க முடியாது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம், மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படலாம். அது போன்ற சமயத்தில் அமில பாதிப்பு ஏற்பட்டவருக்கு எப்படிப்பட்ட முதலுதவிகள் செய்யலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம்,

அமில விபத்துக்கான முதல் உதவிகள்

அமிலத்தை குடித்துவிட்டால்

அமில பாதிப்பு ஏற்பட்டவரின் ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். வாயைத் நல்ல சுத்தமான தண்ணீரால் கொப்பளிக்க வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். மருத்துவமனைக்குச் செல்லும் போது, அந்த நபர் தவறுதலாக குடித்த அந்த அமில பொருளையும் எடுத்து செல்ல வேண்டும். மருத்துவர் அந்த அமிலத்தின் வீரியத்தை வைத்து தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வார். இதனால் சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

தோலில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

தோலில் அமிலம்பட்டிருந்தால், சுத்தமான தண்ணீரை வைத்து அமில பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவும் போது சோப்பை பயன்படுத்தகூடாது. ஏனெனில் சோப்பில் உள்ள வேதிபொருட்கள் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலில் வேதிவினை புரிந்து மேலும் சிக்கலை உண்டாக்கலாம்.

தோல் பகுதியில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கி பின்பு பிழிந்து, அதைத் பாதிப்பு ஏற்பட்ட தோலில் சுற்றலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

கண்களில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் நன்றாக கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் நன்றாக திறந்து மூடச் செய்யலாம்.
மேலும், இமைகளை விலக்கி, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் பாதிப்பு ஏற்படத் கண்ணில் சொட்டு மருந்தை எக்காரணம் கொண்டும் ஊற்றக்கூடாது.

சம்பந்தப்பட்டவரை வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். பின்பு மருத்துவமனையை நாடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...
சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.