உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால்

மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

சாப்பிடுவது போல கனவு

1. பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்று அர்த்தம்.
2. விருந்தில் உணவு உண்பது போல் கனவு வந்தால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
3. காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.
4. இறைச்சி சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
5. மீன் இறந்து கிடப்பது போன்றோ, அல்லது கருவாடு கனவில் வந்தால் பகைவர்களின் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
6. ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
7. சாதம் சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று பொருள்.
8. அரிசி கனவில் வந்தால், நாம் செய்யும் தொழில் மேன்மை அடையும், லாபம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
9. காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் அல்லது சன்மானம் கிடைக்கும் என்று அர்த்தம்.
10. கோழி முட்டை கனவில் வந்தால் தொழில், வியாபாரம் சிறந்து விளங்க போவதன் அறிகுறியாகும்.

தேநீர் குடிப்பது போல கனவு கண்டால்11. டீ(தேநீர்) குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்து போன நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம்.
12. கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
13. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும் என்று அர்த்தம்.
14. சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் மனதில் நினைத்து கொண்டிருக்கும் வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.
15. உப்பு கனவில் வந்தால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று பொருள்.
16. வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
17. புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போலக் கனவு கண்டால் நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று அர்த்தம்.
18. தயிர் சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
19. பருப்பு கனவில் வந்தால் பகைவர்கள் விலகி ஓடுவார்கள் என்று பொருள்.
20. பட்டாணி கனவில் வந்தால் வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும் என்று அர்த்தம்.
21. ரொட்டி (பிரட்) சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
22. பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
23. பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும் என்று அர்த்தம்.
24. இஞ்சி கனவில் வந்தால், நோய்களால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள்.

இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்
25. இனிப்புகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று அர்த்தம்.
26. ஏலக்காய் கனவில் வந்தால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள் என்று அர்த்தம்.
27. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால், மிகுந்த செல்வம் வரப்போவதன் அறிகுறியாகும்.
28. பசியால் வருந்துவது போலக் கனவு கண்டால் வறுமை ஏற்படலாம், செல்வங்கள் கூட கரையலாம் என்று அர்த்தம்.
29. தான் மட்டும் தனியாக சாப்பிடுவது போல் கனவு வந்தால் துன்பங்கள் ஏற்படும். உறவினர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம்.
30. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விருந்தில் சாப்பிடுவது போலக் கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
elumbu theimnaththai sari seyyum unavugal

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

எலும்பு தேய்மானம் எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
ஆரோக்கியமான நகங்கள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

ஆரோக்கியமான நகங்கள் நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின் ' என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடப்படுவது ஏன்

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள்

அற்புத குணம் கொண்ட அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி என்றால் இது வகையான அரிசி வகை என நினைக்க வேண்டாம். இது சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.