சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர் அஞ்சி தயங்கிப் தயங்கி பேசுவார்கள். நல்ல திடமான புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் முன் கோபம் என்பது இவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். பிறரின் காலை பிடித்து முன்னேற மாட்டார்கள். மனசாட்சிபடி நடப்பார்கள் மற்றும் பேசுவார்கள்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்ப்புகளுடன் நன்றாக வாழ்வார்கள். தலைமை பதவிகளில் இருக்கும் பலர் உதாரணமாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடும் உயர்ந்த இடத்தில இருப்பார்கள். ஒரு மாபெரும் கூட்டத்துக்கு தலைவராக இருப்பார்கள். எப்பொழுதும் தனக்கு கீழ் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்கள் நல்ல கவர்ச்சிகரமான மற்றும் எடுப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். தான் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறாரோ அது போலவே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள். தீர்கமாக முடிவு செய்துவிட்டு ஒரு காரியத்தில் இறங்கினால் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் அதிகமாக இருப்பார்கள். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் கலை, மற்றும் இசையில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். தங்கள் தாய், தந்தை மேல் அதிக மிகுந்த பாசம் உள்ளவர்கள்.

இவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் எடுத்து கொண்ட செயல்களில் உறுதியுடன் இருப்பார்கள். இவர்களை பின்னால் இருந்து கவிழ்க்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பார்கள். தற்புகழ்ச்சி மற்றும் சிற்றின்ப பிரியராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எல்லா விதமான சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

தன்னம்பிக்கையுடன் கூடிய விடமுயற்சி கொண்டவர்கள். இவர்கள் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. அனாலும் தான் செய்யும் வேலையில் மிகுந்த கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.  இவர்கள் செய்யும் செலவுகளை பற்றி கொஞ்சமும் கவலைபட மாட்டார்கள். கடன் வாங்குவது என்பது இவர்களுக்கு பிடிக்காது. அப்படியே கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி கொடுத்து விடுவார்கள். இவர்கள் பிறருடன் அனுசரித்து செல்வது என்பது மிகவும் கடினம்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வருவார்கள். இவரின் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். எந்த ஒரு கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யக்கூடியவராக இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை இருப்பார். மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள். மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.  இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமண தடை நீங்க குலதெய்வம் மற்றும் காவல் தெய்வத்தை வணங்கி வருவது நன்மை பயக்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.