நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால்

‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது. அதன்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

மீன் கனவில் வந்தால்

மீன் கனவு பலன்கள்

1. மீன்கள் கூட்டத்தை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும் என்று அர்த்தம்.
2. மீன் பிடிப்பது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
3. மீன் வலையில் சிக்கி துடிப்பதை போலவோ மீன் இறந்துவிட்டது போலவே கனவு வந்தால் ஏற்கனவே செய்த செயலால் அவமானம் வந்து சேரும் என்று அர்த்தம்.
4. சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்வோம் என்று அர்த்தம்.

ஆமை கனவில் வந்தால்

1. ஆமை கனவில் வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றி அடைவீர்கள் என்று அர்த்தம்.
2. ஆமைகள் கூட்டம் கனவில் வந்தால் மனதில் இருந்த கவலைகள் பறந்து போய் நிம்மதி பிறக்கும் என்று அர்த்தம்.

தவளை கனவில் வந்தால்

தவளை கனவு பலன்கள்

1. தவளை கனவில் வந்தால் கவலைகள் மறைந்து மனதில் நிம்மதி பிறக்க போகிறது என்று அர்த்தம்.
2. தவளையை கையால் பிடிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரவிருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவ போகிறது என்று அர்த்தம்.
3. தவளைகள் கூட்டமாக கனவில் வந்தால் மிகவும் நல்லது. செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
4. தவளை கத்துவது போல கனவு வந்தால் அது கெடு பலனை கொடுக்கும்.
5. தேரை கனவில் வந்தால் மிக நெருங்கிய நண்பர்கள் இறப்பார்கள் என்று அர்த்தம்.
6. தேரை மேலே விழுவது போல கனவு கண்டால் மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும் என்று அர்த்தம்.

முதலை கனவில் வந்தால்

முதலை கனவு பலன்கள்

1. முதலை உங்கள் காலை கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.
2. முதலை கனவில் வந்தால் உங்களின் அறிவாற்றல் மேன் மேலும் பெருகும் என்று அர்த்தம்.

நண்டு கனவில் வந்தால்

1. நண்டு கனவில் வந்தால் கடன் ஏற்பட்டு துன்பம் உண்டாக போகிறது என்று பொருள்.
2. கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டு வந்தால் கப்பலுக்கு பெரிய ஆபத்து வரபோகிறது என்று அர்த்தம்.
3. நத்தையை கனவில் கண்டால் தொழில் மெதுவாக பாதிக்கபட போகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? ஸ்திரீ என்றால் பெண் என்று அர்த்தம், தீர்க்கம் என்றால் முழுமையான அல்லது இறுதியான என்று அர்த்தம். ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும்...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...
தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.