நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால்

‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது. அதன்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

மீன் கனவில் வந்தால்

மீன் கனவு பலன்கள்

1. மீன்கள் கூட்டத்தை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும் என்று அர்த்தம்.
2. மீன் பிடிப்பது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
3. மீன் வலையில் சிக்கி துடிப்பதை போலவோ மீன் இறந்துவிட்டது போலவே கனவு வந்தால் ஏற்கனவே செய்த செயலால் அவமானம் வந்து சேரும் என்று அர்த்தம்.
4. சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்வோம் என்று அர்த்தம்.

ஆமை கனவில் வந்தால்

1. ஆமை கனவில் வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றி அடைவீர்கள் என்று அர்த்தம்.
2. ஆமைகள் கூட்டம் கனவில் வந்தால் மனதில் இருந்த கவலைகள் பறந்து போய் நிம்மதி பிறக்கும் என்று அர்த்தம்.

தவளை கனவில் வந்தால்

தவளை கனவு பலன்கள்

1. தவளை கனவில் வந்தால் கவலைகள் மறைந்து மனதில் நிம்மதி பிறக்க போகிறது என்று அர்த்தம்.
2. தவளையை கையால் பிடிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரவிருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவ போகிறது என்று அர்த்தம்.
3. தவளைகள் கூட்டமாக கனவில் வந்தால் மிகவும் நல்லது. செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
4. தவளை கத்துவது போல கனவு வந்தால் அது கெடு பலனை கொடுக்கும்.
5. தேரை கனவில் வந்தால் மிக நெருங்கிய நண்பர்கள் இறப்பார்கள் என்று அர்த்தம்.
6. தேரை மேலே விழுவது போல கனவு கண்டால் மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும் என்று அர்த்தம்.

முதலை கனவில் வந்தால்

முதலை கனவு பலன்கள்

1. முதலை உங்கள் காலை கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.
2. முதலை கனவில் வந்தால் உங்களின் அறிவாற்றல் மேன் மேலும் பெருகும் என்று அர்த்தம்.

நண்டு கனவில் வந்தால்

1. நண்டு கனவில் வந்தால் கடன் ஏற்பட்டு துன்பம் உண்டாக போகிறது என்று பொருள்.
2. கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டு வந்தால் கப்பலுக்கு பெரிய ஆபத்து வரபோகிறது என்று அர்த்தம்.
3. நத்தையை கனவில் கண்டால் தொழில் மெதுவாக பாதிக்கபட போகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...
உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது....
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடப்படுவது ஏன்

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #11

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். இதை தான் நம் முன்னோர்கள் 'திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்" என்று சொன்னார்கள். செய்த வினையை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.