தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்,

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தேவையான பொருட்கள்:

1. கோழி கறி – ½ கிலோ
2. நெய் – 2 மேஜை கரண்டி
3. எண்ணெய் – தேவையான அளவு
4. பாசுமதி அரிசி – 2 கப்
5. வெங்காயம் – 1 No.
6. பச்சை மிளகாய் – 3 No.
7. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
8. மிளகாய் தூள் – 1 மேஜை கரண்டி
9. மஞ்சள் தூள் – 1 மேஜை கரண்டி
10. கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
11. தண்ணீர் – 2 கப்
12. உப்பு – தேவையான அளவு
13. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
14. புதினா – 1 கைப்பிடி அளவு

ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

1. கெட்டியான புளிக்காத தயிர் – 1 கப்
2. மிளகாய் தூள் – ½ மேஜை கரண்டி
3. உப்பு – தேவையான அளவு

பிரியாணி மசாலா செய்வதற்கு:

1. சோம்பு – 1 ½ மேஜை கரண்டி
2. பட்டை – 2 No.
3. ஏலக்காய் – 4 No.
4. அன்னாசிப்பூ – 1 No.
5. கிராம்பு – 4 No.

செய்முறை:

1. முதலில் கோழி கறியை நன்கு நீரில் கழுவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய கோழி கறியை போட்டு, அதனுடன் கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

4. பின்னர் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

5. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

6. பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

7. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

8. பின்பு ஊற வைத்த சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை கலந்து விட்டு 15 நிமிடம் மிதமான  தீயில் வேக வைக்க வேண்டும்.

9. பின்னர் குக்கரில் வாணலியில் வேக வைத்த சிக்கனை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

10. பின்பு அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும்.

11. பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி தழை, புதினா, தேங்காய் பால் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

12. நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

13. விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்தால், சுவையான தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.