ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள்

யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு பலனையும் தரலாம். பெரிய அதிகாரி முதல், பிச்சைக்காரர் வரை யோகங்களால் தான் அந்த நிலையை அடைய முடியும். அந்த வகையில் பலவிதமான யோகங்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம். இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அவற்றின் பலன்களையும் பார்க்கலாம்.

யோகங்கள் 27

சரள யோகம் :

8ம் அதிபதி 8ல் பலம் பெற்று இருந்தால் சரள யோகம் ஏற்படுகிறது.

சரள யோகத்தின் பலன்கள் :

இவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். சிறந்த கல்விமான். எதிரிகளை வெல்லும் திறமை இவர்களிடம் நிறைந்திருக்கும்.

அசுர யோகம் :

லக்னத்தில் குருவும், சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுப கிரகத்துடன் இணைந்து இருந்தால் அசுர யோகம் உண்டாகிறது.

அசுர யோகத்தின் பலன்கள் :

பொதுச்சேவையில் ஈடுபட்டு கீர்த்தி உண்டாகும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிட்டும். இந்த யோகம் 40 வயதுக்கு மேல் சிறந்த பலனை கொடுக்கும்.

பாதாள யோகம் :

லக்னத்திற்கு பனிரெண்டில் சுக்கிரன் இருந்து பனிரெண்டாம் வீட்டுக்கு உரியவர் உச்சம் பெற்று குருவுடன் இணைந்திந்தால் பாதாள யோகம் உண்டாகிறது.

பாதாள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். வாழ்வின் பிற்பகுதியில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வார்கள்.

கவுரி யோகம் :

மனோகாரகனான சந்திரன் உச்சம் பெற்று குரு பார்த்தால் கவுரி யோகம் உண்டாகிறது.

கவுரி யோகத்தின் பலன்கள் :

தெய்வீக வழிபாடு, நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது. இறை வழிபாட்டில் அதிக ஈடுபாடு இருக்கும்.

இந்திர யோகம் :

லக்னத்திற்கு 5ம் வீட்டில் சந்திரன் அமையப்பெற்று 5 மற்றும் 11ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இந்திரயோகம் உண்டாகிறது.

இந்திர யோகத்தின் பலன்கள் :

இவர்கள் தைரியம் மிக்கவர்கள், புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ்வார்கள்.

யோகங்களின் வகைகள்

பிரபை யோகம் :

லாபாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து 1,4,7,1௦ ஆகிய இடங்களில் இருக்க பிரபை யோகம் உண்டாகிறது.

பிரபை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

யோகம் உடையவர்கள். பொதுச் சேவையில் ஈடுபாடு இருக்கும். கீர்த்தி உடையவர்கள். அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.

காஹள யோகம் :

4ம் வீட்டு அதிபதியும், 9ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து லக்னாதிபதி பலமடைந்து இருந்தால் காஹள யோகம் உண்டாகிறது.

காஹள யோகத்தின் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் பிடிவாதகாரராகவும், தைரியம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

மகாலட்சுமி யோகம் :

ஒன்பதாம் அதிபதியும், சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர்ந்து இருந்தால் மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.

மகாலட்சுமி யோகத்தின் பலன்கள் :

வாழ்க்கை துணைவி மூலம் லாபம் உண்டாகும். தலைமை பதவி உண்டாகும். வாகன வசதிகள் ஏற்படும். அதிகாரம் செய்யும் பதவி அடைவர்.

சதா சஞ்சார யோகம் :

லக்னாதிபதி சரராசியில் இருந்தால் சதா சஞ்சார யோகம் உண்டாகும்.

சதா சஞ்சார யோகத்தின் பலன்கள் :

அதிக அலைச்சல், அதிகப்படியான பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகிறது

பாக்கிய யோகம் :

லக்னத்திற்கு 10ம் வீட்டில் சுப கிரகம் இருப்பது அல்லது 10ம் அதிபதியான பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெற்றால் பாக்கிய யோகம் உண்டாகிறது.

ஜோதிடத்தில் யோகங்கள்

பாக்கிய யோகத்தின் பலன்கள் :

இவர்கள் புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். உதவும் குணம் கொண்டவர்கள். வாகன பிரியர்கள். அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர்.

அங்கஹீன யோகம் :

12ம் அதிபதி கேந்திர திரிகோண வீடுகளில் ராகுவுடன் இணைவதால் உண்டாவது அங்கஹீன யோகம் ஏற்படுகிறது.

அங்கஹீன யோகத்தின் பலன்கள் :

உடல் உறுப்புகளில் ஏதாவது குறை இருக்கும்.

லக்ன கர்மாதிபதி யோகம் :

லக்னாதிபதியும் 10ம் அதிபதியும் ஏதாவது வீடுகளில் இணைவது அல்லது பார்வை மற்றும் சேர்க்கை மூலம் பலம் பெற்றால் லக்ன கர்மாதிபதி யோகம் உண்டாகிறது.

லக்ன கர்மாதிபதி யோகத்தின் பலன்கள் :

பிறரின் உதவியின்றி தன் வாழ்க்கையில் தானே முன்னேறுவார்கள்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...
ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
தீ விபத்துக்கான முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை...
ஆடி செவ்வாய் வழிபாடு

ஆடிச் செவ்வாயும் ஔவையார் விரதமும்

ஆடிச் செவ்வாய் விரதம் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். மற்ற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் தான் அம்மனுக்கு வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும்...
குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.