நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள்

ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு காணலாம்.

பிறந்த தேதி பலன்

1-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் தங்களின் விருப்பப்படியே நடப்பார்கள். இவர்களிடம் பொறுமை என்பது இருக்காது. இவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்ல மாட்டார்கள். சூழ்நிலையை அறிந்து செயல்பட மாட்டார்கள். தன்னம்பிக்கை குணம் அதிகம் கொண்டவர்கள். முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள். இவர்கள் மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.

2-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் வாழ்கையில் உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள். கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள். தான் சார்ந்த சமூகம் தொடர்பான புரட்சிகரமான எண்ணங்களை உடையவர்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அறிவியல் மற்றும்  ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் விருப்பம் அதிகம் கொண்டவர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்கள். எல்லாவற்றையும்  நிதானமாக கையாள்வர்கள்.

3-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். தன்னுடைய ஆற்றலை நல்ல முறையில் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் கொண்டவர்கள். தான் சார்ந்த துறைகளில் பிரகாசிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

மொழி மற்றும் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின்  வாழ்க்கையானது கௌரவமாகவும், உயர்வாகவும் அமையும். நடுத்தர  வயதிற்கு மேல் புகழ் பெறுவார்கள்.

4-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். இவர்களிடம் துணிச்சலும், உடல் வலிமையும் அதிகம் இருக்கும். மிகுந்த சுயக்கட்டுப்பாடு உடையவர்கள் . எளிதில் உணர்ச்சிவசப்படமாட்டார்கள்.

உலக சுகங்களின் மீது அதிக பற்று உடையவர்கள். வாழ்வில் பல்வேறு  விதமான சோதனைகளை சந்திக்கக்கூடியவர்கள். இவர்கள் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள். குடும்பத்தின் மீது அதிக அன்பும், பாசமும் வைத்திருப்பார்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள்.

5-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் தெளிவான சிந்தனை உடையவர்கள். எல்லா செயல்களிலும் உற்சாகமாக செயல்படுவார்கள். இவர்களிடம் பல்வேறு திறமைகள் ஒளிந்திருக்கும். இவர்கள் அழகான தோற்றம் மற்றும் மற்றவர்களை தன் பால் ஈர்க்கும் ஈர்ப்பு சக்தி கொண்டவர்கள்.

இவர்கள் உயர்ந்த லட்சியம் கொண்டவர்கள். இவர்களின் மனம் ஒரு நிலையாக இருக்காது, அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இவர்கள் பயணங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். ஆன்மிகம் தொடர்புடைய  செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

6-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம். எதையும்  சுயநலத்துடன் செய்ய மாட்டார்கள். அமைதியான குணம் கொண்டவர்கள்.
கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். பொன், பொருள் சேர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள். சுகபோகமாக வாழ வேண்டும் என விரும்புவார்கள்.

7-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் அவசரபடாமல் எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவார்கள். அமைதியான குணம் கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் மனபான்மை நிரம்பியவர்கள். நேர்மை தவறாதவர்களாகவும், கண்டிப்பு குணம் கொண்டவர்களவும் இருப்பார்கள்.

மேலும் பிடிவாத குணம் அதிகம் இவர்களிடம் இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பவர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள். இவர்களிடம் அலட்சிய குணம் அதிகம் இருக்கும், இதனால் நிறைய இழப்புகளையும் சந்திப்பார்கள்.

8-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் தாங்கள் சார்ந்த தொழிலில் அதிக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த மாதிரியான சூழ்நிலையையும் எதிர்கொண்டு அதை சமாளிக்க கூடியவர்கள். தலைமை பண்பு அதிகம் கொண்டவர்கள். கற்பனை வளம் அதிகம் கொண்டவர்கள். தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். ஆரவாரமில்லாத அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

9-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் வீர தீரமான செயல்களை செய்யக்கூடியவர்கள். எதையும் வித்தியாசமாக செய்யகூடியவர்கள். தங்களின் சாதுர்யமான செயல்பாடுகளால் எந்த வகையான எதிர்ப்பு வந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறக்கூடியவர்கள். இவர்களிடம் புதிய சிந்தனைகளும், தொலைநோக்கு பார்வையும் இருக்கும்.

இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். எல்லோரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எதை செய்தாலும் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.

10-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் எதிலும் நிதானமாக செயல்படும் குணம் கொண்டவர்கள். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மற்றவர்களை அனுசரித்து செல்வார்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டவர்கள்.

11-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். அந்த நம்பிக்கையின் மூலமே எண்ணிய காரியத்தை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் சண்டை போடாமல் சமரசமாக போவதையே விரும்புவார்கள். அனைவரிடமும் நல்ல பெயரை வாங்குவார்கள்.

இவர்களிடம் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகம் உண்டு. எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் தன் நிலையில் இருந்து தவற மாட்டார்கள். பொருள் வளம் குறைவாக இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

12-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களிடம் சுயநலம் இருக்காது. மற்றவர்கள் நன்மைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடியவர்கள். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும், விருப்பமும் கொண்டவர்கள்.
விட்டுக்கொடுக்கும் குணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். குழந்தை பருவத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். மத்திம வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்தவர்களாக திகழ்வார்கள்.

13-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களிடம் இயல்பாகவே மொழி மற்றும் கலாச்சார ஈடுபாடு அதிகம் உண்டு. இவர்களிடம் அலட்சிய போக்கு அதிகம் இருக்கும். இவர்களின்  குழந்தை பருவம் போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.

இவர்கள் எதிர்ப்புகளை அதிகம் சம்பாரிப்பார்கள். இவர்கள் கடும் உழைப்பாளிகள், அதன் மூலம் நிறைந்த புகழையும், பெருஞ்செல்வத்தையும் சேர்ப்பார்கள்.

14-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றி கொள்ளும் குணம் உடையவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் அதிக விருப்பம் உடையவர்கள். பொது வாழ்க்கையில் ஈடுபாடு உடையவர்கள். பயணத்தில் நாட்டம் இருக்கும். சோம்பேறித்தனம் கொண்டவர்கள். தன் கடின உழைப்பின் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவார்கள். பிடிவாத குணம் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

15-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களிடம் எல்லாவிதமான திறமைகளும் இருக்கும். எதிலும் அவசரபடாமல் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள். தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே இருக்கும். மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர்கள். இவர்களிடம் நினைவுத்திறன் அதிகம் இருக்கும்.

16-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் கற்பனைவாதிகள். எதையும் தத்துவ ரீதியாக அணுகுவார்கள். எந்தவொரு விஷயத்தையும் நுணுக்கமாக அறிந்து கொண்டு அதை செயல்படுத்துவார்கள். இவர்களிடம் மனோசக்தி அதிகம் உண்டு. பல்வேறு  திறமைகளை உடையவர்கள். இவர்களின் துணிச்சலும், சிந்தித்து செயல்படும் குணமும் உடன் பிறந்ததாகும். இவர்களில் சிலர் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

17-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் உயர்ந்த இலட்சியங்களை கொண்டவர்கள். இவர்களிடம் எதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற தைரியம் அதிகம் இருக்கும். பொருள் ஈட்டுவதற்கு கடின முயற்சியை செய்யக்கூடியவர்கள். எந்த நிலைக்கு சென்றாலும் வந்த நிலையை மறக்காதவர்கள்.

எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உழைத்து முன்னேற்றம் அடையக்கூடியவர்கள். நுட்பமான அறிவுத்திறனை கொண்டவர்கள்.

18-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் எதிலும் உணர்ச்சிவசப்படகூடியவர்கள், இதன் காரணமாக தன்னுடைய முன்னேற்றத்தை தானே கெடுத்து கொள்ளக்கூடியவர்கள். எதையும் தனது விருப்பம் போல் செய்யக்கூடியவர்கள். கலாச்சாரம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். சுயநலம் கொண்ட செயல்பாடுகளை உடையவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள்.

19-ம் தேதியில் பிறந்தவர்கள்

சிந்தனை வளம் அதிகம் கொண்டவர்கள். இவர்களின் செயல்கள்  வினோதமானதாக இருக்கும். எந்த சூழ்நிலை வந்தாலும் தான் கொண்ட கருத்தில் இருந்து மாறமாட்டார்கள். தான் கொண்ட கொள்கையில் பிடிவாத குணம் அதிகம் இருக்கும்.

மற்றவர்கள் மீது தனது விருப்பங்களை திணிக்கமாட்டார்கள். பல்வேறு துறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். தன்னை எதிர்ப்பவர்களை சரியான நேரம், காலம் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

எண் கணிதம் எப்படி பார்ப்பது

20-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள். சுயநலமில்லாமல் இவர்கள் செயல்பட்டால் அனைவராலும் விரும்ப கூடிய நபராக இருப்பார்கள். பேராசை இல்லாமல் வாழ்வாராயின் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழக்கூடியவர்கள். சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

21-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களிடம் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகம் உண்டு. இவர்கள்  சுயநலமான எண்ணம் உடையவர்கள். எந்த செயல் செய்தாலும் அதில் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்ப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கை போராட்டமானதாக இருந்தாலும் மனதைரியத்தால் முன்னேற்றம் அடைவார்கள். பொதுநலத்தோடு செயல்பட்டால் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

22-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் இருக்கும். நிறைய பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதனாலேயே இவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வீம்புக்காக இவர்கள் செய்யும் செயல்களால் இவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும்.

இவர்களிடம் பல தொழில்கள் செய்யும் திறமை இருக்கும். எதையும் விரைவாக கற்றுக்கொள்வார்கள். அனைவரிடமும் இனிமையாக பழகும் குணம் கொண்டவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

23-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். இவர்களிடம் எப்போதும் ஒரு புன்சிரிப்பு இருக்கும். இவர்களின் வார்த்தைகளுக்கு மற்றவர்களிடம் எப்போதும் ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் அடையக்கூடியவர்கள். சகல வசதிகளுடன் வாழக்கூடியவர்கள்.

24-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். அனைவரையும் சமமாக கருதும் மனம் உடையவர்கள். எதையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவார்கள், அதுவே இவர்களின் பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும். தன் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிப்பார்கள். மனஅழுத்தம் நிரம்பியவர்கள். துணிச்சல் மிகுந்த செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.

25-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்கள். எதையும் தீர ஆராய்ந்து செயல்படும் தன்மை கொண்டவர்கள். இவர்களின் செயல்களில் பொதுநலம் அதிகம் இருக்கும். பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் நிறைந்தவர்கள். சுயநலமின்றி மக்களுக்கு சேவை செய்வார்கள். அறிவு சார்ந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

26-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் தன்னுடைய திறமையை கொண்டு பொருள் ஈட்டும் குணம் கொண்டவர்கள். நல்ல ஆளுமை திறன் கொண்டவர்கள். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது காரியத்தை சாதித்து கொள்ள கூடியவர்கள். புகழ்ச்சியை விரும்புபவர்கள். வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு அதிகம் கொண்டவர்கள். இவர்களின் பொருளாதார விஷயத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் இருக்கும்.

27-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்களிடம் மற்றவர்களை தன்பால் ஈர்க்கும் குணம் இருக்கும். பல்வேறு  துறை பற்றிய அறிவு உடையவர்கள். இவர்களிடம் நிதானமான செயல்பாடுகள் இருக்கும். அவசரமின்றி செயல்படுவதால் முன்னேற்றம் அடைவார்கள்.

இவர்களிடம் தந்திரமான செயல்பாடுகள் இருக்கும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களிடம் சுதந்திர மனப்பான்மை அதிகம் இருக்கும். நிதானமான குணம் உடையவர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்வரை மனம் தளராமல் உழைக்கக்கூடியவர்கள்.

28-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்படுவார்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வதால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஆதரவு இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

கள்ளம், கபடம் இல்லாத மனம் கொண்டவர்கள். துன்பம் வரும் காலங்களில் அதை விதி என எடுத்துக் கொண்டு அதை அதன் போக்கில் விட்டு விடுவார்கள். வீண் கர்வம், ஆடம்பர பேச்சு ஆகியவைகளை குறைத்து கொண்டால் விரயங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

29-ம் தேதியில் பிறந்தவர்கள்

இவர்கள் எதிலும் போராடும் மனம் கொண்டவர்கள். அமைதியை விரும்புபவர்கள். தனது காரியத்தில் கண்ணும், கருத்துமாக செயல்படக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் என்பது இவர்களிடம் குறைவு. பணம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உடையவர்கள்.

காரணமின்றி சண்டையிடும் குணம் கொண்டவர்கள். விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள். எந்த செயல் எடுத்தாலும் அல்லது கருத்துக்கள் கூறினாலும் அதை மறுக்கும் குணம் கொண்டவர்கள். வெளியில் வீராப்பு இருந்தாலும், மனதளவில் பயந்த சுபாவம் உடையவர்கள்.

30-ம் தேதியில் பிறந்தவர்கள்

எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள். தன் விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள். எதையும் கூர்ந்து கவனிப்பதில் வல்லவர்கள். நுட்பமான அறிவை கொண்டிருப்பார்கள். செல்வாக்கான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். வீரம் நிறைந்த செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். கலைகளில் தேர்ச்சி அடையக்கூடியவர்கள். மனோதைரியமும், விடாமுயற்சியும் உடையவர்கள்.

31-ம் தேதியில் பிறந்தவர்கள்

தன்னுடைய விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள். பொதுநல காரியங்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள். குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டவர்கள். மனோசக்தி மிகுந்தவர்கள். கடவுள் பக்தி நிறைந்தவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பொடுகு பிரச்சனையை தீர்க்க

பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்  தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட...
தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன் சதயம் நட்சத்திரத்தின் பரிகார...
திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.