கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள் இருந்தால் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்றும், வெள்ளை நிற பூக்களை வெள்ளை கரிசலாங்கண்ணி என்றும் அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணி பயன்கள்

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என்றும், தேச‌சுத்தி மூலிகை எனவும் அழைக்கபடுகிறது. இது வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனவும் அழைக்கபடுகிறது. இது பல்வேறு அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட காய கல்ப மூலிகையாகும்.

கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என அழைக்படுகிறது. இது அனைத்து வகையான ஈரமான நிலங்களிலும் தானே வளரும் தன்மையுடையது. அத்துடன் நீர் வளம் நிறைந்த இடங்களில் அதிகம் வளர்கிறது.

கரிசலாங்கண்ணி வேறு பெயர்கள்

கரிக்கண்டு, கையாந்தகரை, கரிசனம், பொற்றலைக் கரிப்பான், கரிச்சான் பூண்டு, கையாள், பொற்கொடி, சாணாவு, சவுநாகம், கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல்வேறு பெயர்களில் கரிசலாங்கண்ணி அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணியில் உள்ள சத்துக்கள்

கரிசலாங்கண்ணியில் நீர்சத்து, மாவுசத்து, புரதசத்து, கொழுப்புசத்து, கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பயன்கள்

புண்களை விரைவில் ஆற்றும்

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாகும். இது அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் இதன் லையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டு போட்டாலும் புண்களை மிக விரைவில் புண்கள் ஆற்றிவிடும்.

கண்கள் பார்வை பிரகாசமாகும்

கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் அது கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும்.

தேவையற்ற ஊளை சதையை குறைக்கும்

உடலில் உள்ள தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை சேர்த்து கஷாயம் போல செய்து குடித்து வரலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.

கண் பார்வை தெளிவடையும்

கரிசலாங்கண்ணி இலை குழந்தைகளுக்கு ஏற்படும் மந்த நோய்களைப் குணமாக்கும். கண்பார்வை தெளிவடையும். கண் நரம்பு படலங்களில் உள்ள கெட்ட நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும். கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் கரிசலாங்கண்ணி சாறு தான் அந்த நோயில் குணமாவதற்கு முதன்மையான மருந்து. மேலும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது கரிசலாங்கண்ணி.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்தத்தில் உள்ள நீர்மத்தன்மை குறையும். இதனால் இரத்தம் தண்ணீர் போல அல்லாமல் சிறிது கெட்டியாக பசைத் தன்மை அடைகிறது. இதனால் இரத்தம் இரத்த நாளங்களில் எளிதாக செல்லாமல் ஆங்காங்கு படிந்து இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் பழையபடி நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து குடித்து வரலாம்.

இளமையை தக்க வைக்கும்

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலின் மினுமினுப்பு அதிகரிக்கும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நரை, மூப்பு ஏற்படுவது தள்ளி போகும். மேலும் கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்ச்சியை போக்கி மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அடைய செய்யும்.

காச நோயை தீர்க்கும்

ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காச நோய்கள் குணமாகும், மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் தீரும்.

இதயத்தை சீராக செயல்பட வைக்கும்

கரிசலாங்கண்ணி கீரை இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் மண்ணீரல், மற்றும் சிறுநீரகத்தைப் பலமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

கரிசலாங்கன்னி கீரை

மன நோயை தீர்க்கும்

ஆரம்ப நிலையில் உள்ள மனநோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை தான் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கருசிதைவை தடுக்கும்

அடிகடி கருசிதைவு பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் கரிசலாங்கண்ணிச் சாற்றையும் பசும் பாலையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும்.

மஞ்சள் காமாலையை குணமாக்கும்

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 முதல் 10 நாட்களில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ மட்டன் கறி – ½ கிலோ பெரிய வெங்காயம் – 3 ( பெரியது...
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...
தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய் தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச்...
கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.