கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள் இருந்தால் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்றும், வெள்ளை நிற பூக்களை வெள்ளை கரிசலாங்கண்ணி என்றும் அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணி பயன்கள்

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என்றும், தேச‌சுத்தி மூலிகை எனவும் அழைக்கபடுகிறது. இது வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனவும் அழைக்கபடுகிறது. இது பல்வேறு அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட காய கல்ப மூலிகையாகும்.

கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என அழைக்படுகிறது. இது அனைத்து வகையான ஈரமான நிலங்களிலும் தானே வளரும் தன்மையுடையது. அத்துடன் நீர் வளம் நிறைந்த இடங்களில் அதிகம் வளர்கிறது.

கரிசலாங்கண்ணி வேறு பெயர்கள்

கரிக்கண்டு, கையாந்தகரை, கரிசனம், பொற்றலைக் கரிப்பான், கரிச்சான் பூண்டு, கையாள், பொற்கொடி, சாணாவு, சவுநாகம், கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல்வேறு பெயர்களில் கரிசலாங்கண்ணி அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணியில் உள்ள சத்துக்கள்

கரிசலாங்கண்ணியில் நீர்சத்து, மாவுசத்து, புரதசத்து, கொழுப்புசத்து, கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பயன்கள்

புண்களை விரைவில் ஆற்றும்

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாகும். இது அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் இதன் லையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டு போட்டாலும் புண்களை மிக விரைவில் புண்கள் ஆற்றிவிடும்.

கண்கள் பார்வை பிரகாசமாகும்

கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் அது கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும்.

தேவையற்ற ஊளை சதையை குறைக்கும்

உடலில் உள்ள தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை சேர்த்து கஷாயம் போல செய்து குடித்து வரலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.

கண் பார்வை தெளிவடையும்

கரிசலாங்கண்ணி இலை குழந்தைகளுக்கு ஏற்படும் மந்த நோய்களைப் குணமாக்கும். கண்பார்வை தெளிவடையும். கண் நரம்பு படலங்களில் உள்ள கெட்ட நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும். கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் கரிசலாங்கண்ணி சாறு தான் அந்த நோயில் குணமாவதற்கு முதன்மையான மருந்து. மேலும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது கரிசலாங்கண்ணி.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்தத்தில் உள்ள நீர்மத்தன்மை குறையும். இதனால் இரத்தம் தண்ணீர் போல அல்லாமல் சிறிது கெட்டியாக பசைத் தன்மை அடைகிறது. இதனால் இரத்தம் இரத்த நாளங்களில் எளிதாக செல்லாமல் ஆங்காங்கு படிந்து இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் பழையபடி நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து குடித்து வரலாம்.

இளமையை தக்க வைக்கும்

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலின் மினுமினுப்பு அதிகரிக்கும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நரை, மூப்பு ஏற்படுவது தள்ளி போகும். மேலும் கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்ச்சியை போக்கி மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அடைய செய்யும்.

காச நோயை தீர்க்கும்

ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காச நோய்கள் குணமாகும், மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் தீரும்.

இதயத்தை சீராக செயல்பட வைக்கும்

கரிசலாங்கண்ணி கீரை இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் மண்ணீரல், மற்றும் சிறுநீரகத்தைப் பலமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

கரிசலாங்கன்னி கீரை

மன நோயை தீர்க்கும்

ஆரம்ப நிலையில் உள்ள மனநோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை தான் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கருசிதைவை தடுக்கும்

அடிகடி கருசிதைவு பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் கரிசலாங்கண்ணிச் சாற்றையும் பசும் பாலையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும்.

மஞ்சள் காமாலையை குணமாக்கும்

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 முதல் 10 நாட்களில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா தேவையான பொருட்கள் பட்டர் - 1 கப் இறால் – ½ கிலோ முட்டை – 4 ( வேக வைத்தது ) வெங்காயம் -  2 (...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
மகர ராசி

மகர ராசி பொது பலன்கள் – மகர ராசி குணங்கள்

மகர ராசி குணங்கள் மகர ராசியின் ராசி அதிபதி சனி பகவான் ஆவார். உத்திராடம் நட்சத்திரத்தின் 2, 3, 4 ஆம் பாதங்களும், திருவோணம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தின் 1, 2...
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
chinese garlic chicken

சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன் தேவையான பொருட்கள் 1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது ) 2. மைதா – 3 ஸ்பூன் 3. சோள மாவு – 3 ஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு 5....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.