கூந்தலை பராமரிக்க சின்ன சின்ன ஆலோசனைகள்

கூந்தல் பராமரிப்பு 

பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். அதிலும் நீளமான கூந்தலை உடைய பெண்கள் பார்க்க மிகவும் அழகாகவும் இருப்பார்கள். நீண்ட கூந்தலை உடைய பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். அத்தகைய கூந்தலை பெண்கள் சிறந்த முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

கூந்தல் பராமரிப்பு முறைகள் கூந்தலை வெளியில் செல்லும் நேரம் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் இரவு தூங்கும் போதும் தலைமுடிக்கு முக்கியத்துவம் அளித்து பராமரிக்க வேண்டும். பொதுவாக பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை, வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.

தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள் . ஆனால் அதற்க்கான அக்கறையை காட்டுவதில்லை. கடைகளில் விற்க கூடிய கண்ட கண்ட ஷாம்பூகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஷாம்புவில் உள்ள ரசாயனம், முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்கிறது என்பதுதான் உண்மை. இதனால் முடி கொட்டுதல், தலை முடி உடைதல், முடியில் வெடிப்பு, பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

கூந்தலை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்

  • தலை குளித்த உடனே தலையை காயவைக்க வேண்டும்.எனவே ஒரு டவல் மூலம் தலையை சுற்றி காயவைக்கலாம் அல்லது காற்றில் உலரவிடலாம்.
  • சுருட்டை முடி அல்லது அடர்த்தியான முடி உள்ளவர்கள், ஈரமான கூந்தலை நன்கு உலர வைத்து பின் சீவ வேண்டும்.
  • தலைமுடியை இறுக்கமா பின்னவோ, கட்டவோ கூடாது. தளர்வாக பின்ன வேண்டும்.
  • நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற
  • பெரும்பாலும் பெண்கள் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கொண்டை போட்டுக்கொள்வது வழக்கம். அது தவறானது.
  • இதனால் மயிர்க்கால்கள் கடுமையாகப் பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படும்.
  • இரவு தூங்குவதற்கு முன் கூந்தலை நன்றாக சீவுவது நல்லது. இதனால் கூந்தலில் சிக்கல் விழாமல் இருக்கும். அப்படி இரவில் தூங்கும்போது கூந்தலில் சிக்கல்கள் விழுந்தாலும், எளிதில் சரிப்படுத்திவிடலாம்.
  • சிக்கல் கூந்தலுடன் தூங்கினாள் பாதிப்பு அதிகமாகி கூந்தலின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சனையையும் எதிர்கொள்ள நேரிடும்.
  • இரவில் தூங்குவதற்கு முன் தலையில் வியர்வையினால் ஈரப்பதம் இருந்தால் மயிர்க்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இது பொடுகுத் தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
  • இரவில் தலைக்கு குளித்தால் கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு தூங்க வேண்டும்.
  • இரவு தலையில் எண்ணெய் வைத்து மயிர்க்கால்களை நீவி விட்டால் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால் மயிர்க்கால்கள் வலுப்படுவதால், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • இரவில் கூந்தலுக்கு எண்ணெய் வைத்து தூங்கினால் காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.
  • வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறைகளை மாற்ற வேண்டும். ஏனெனில் தலையில் இருக்கும் எண்ணெயும் தலையணை உறையில் படிந்து அழுக்கு சேர்த்துவிடும். இதனால் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படும்.
  • சிறிது கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4 இரண்டையும் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
  • கூந்தல் அடர்த்தியாக வளர, வாரம் ஒரு முறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும்.
  • தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும்.
  • வாரத்திற்கு ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தடவி குளித்து வர கூந்தல் கருமையுடன் நீண்டு வளரும்.
  • தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை

ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். விதவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும் மட்டன் பிரியாணிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதுவும் ஒவ்வொரு பகுதிகேற்ப ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கபடுகிறது....
ஆப்பிள் மருத்துவ பயன்கள்

ஆப்பிள் பழத்தின் மருத்துவ குணங்கள் | ஆப்பிள் பயன்கள் மற்றும் நன்மைகள்

ஆப்பிள் ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும்....
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
ராசி பொருத்தம் என்றால் என்ன

ராசி பொருத்தம் என்றால் என்ன?

ராசி பொருத்தம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படுகிறது. இது சந்திர லக்னம் என்று அழைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் உடல் ஆரோக்கியம், மக்கள்பேறு, நீண்ட...
பிரண்டை மருத்துவ பயன்கள்

பிரண்டை மருத்துவ குணங்கள்

பிரண்டை பிரண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் ஒரு தாவர வகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது பொதுவாக வெப்பம் அதிகமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது இந்தியா மற்றும் இலங்கை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.