செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் கிரேவி

செட்டிநாடு சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள்

  1. சிக்கன் –  ½ கிலோ
  2. தக்காளி – 2
  3. பெரிய வெங்காயம் – 2
  4. பச்சை மிளகாய் – 3
  5. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் – ½  கப்
  7. கசகசா – 1 ஸ்பூன்
  8. சோம்பு – 1 ஸ்பூன்
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  12. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  13. உப்பு – தேவையான அளவு
  14. பட்டை – 1 பெரிய துண்டு
  15. கிராம்பு – 3
  16. சீரகம் – ¼ டீஸ்பூன்
  17. மிளகு – 1 ஸ்பூன்
  18. கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி

செய்முறை :

  1. முதலில் சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  3. சிக்கன் கிரேவி செய்ய ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம்,மிளகு, கசகசா, முந்திரி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சிறிதளவு சோம்பு போட்டு தாளிக்கவும்.
  6. தாளித்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி நன்கு கரையும் அளவிற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  9. இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  10. இஞ்சி பூண்டு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
  11. சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும்.
  12. மசாலா சிக்கனோடு நன்றாக கலந்து வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
  13. இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  14. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.
  15. இறுதியாக கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...
ராசி பொருத்தம் என்றால் என்ன

ராசி பொருத்தம் என்றால் என்ன?

ராசி பொருத்தம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படுகிறது. இது சந்திர லக்னம் என்று அழைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் உடல் ஆரோக்கியம், மக்கள்பேறு, நீண்ட...
சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...
பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.