மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத காரியங்களை சாதுர்யமாக முடித்து காட்டுவார்கள்.

மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

இவர்கள் கௌரவம் பார்க்க வேண்டிய இடங்களில் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை அவர்களின் முகத்தை வைத்தே அறிந்து கொள்வார்கள். இவர்கள் சூழ்நிலைக் ஏற்றார்போல நடந்து கொள்வார்கள். கலை ஆர்வமும், சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனஉறுதியும், தெளிவான பார்வையும் கொண்டவர்களாதலால் இயற்கையாகவே மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

இவர்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் நெருங்கி பழகுவர். இவர்களுக்கு நெருக்கமானவர்கள் எதை சொன்னாலும், செய்தாலும் தாங்கிக் கொள்வர். குடும்ப விவகாரங்களில் இவர்களுக்கு ஒரு பிடிப்பு இருக்காது. விரக்தியான மனோபாவமும், தியாக உணர்ச்சியும் இவர்களுடைய இயற்கையான சுபாவங்களாகும்.

இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உயர்ந்த அந்தஸ்து, சேவை, தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை வேண்டாம் என  புறக்கணித்து அதிலிருந்து வெளியேறுவார்கள். சொல் ஒன்று, செயல் ஒன்று என்பது இவர்களிடம் அறவே இருக்காது. இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடலாம். இவருடைய திட்டங்களுக்கும், செயல்களுக்கும் தடை விதிக்க எவராலும் இயலாது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். குறிக்கோளுடன் செயல்படுவதில் வல்லவர்கள்.

இவர்கள் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். இவர்களிடம் மன உறுதி அதிகம் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. சிலசமயம் மனதில் சந்தேக எண்ணங்கள், சஞ்சலங்கள் உருவானாலும் அதிலிருந்து விடுபட்டு தைரியமாக காரியத்தை சாதித்து கொள்வார்கள்.

எந்த வேலை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியத்தை செய்யக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள், மற்றும் உறவினர்களை பெற்றிருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிவிடுவதால் இவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் இருக்காது.

இவர்களுக்கு பெரிய பதவிகள், தலைமைப் பொறுப்புகள் தானாக வந்தடையும். சுக்கிரன் இவர்களுக்கு யோகமாக அமைந்துவிட்டால் லட்சுமி யோகம் உண்டு. புதனும், செவ்வாயும் சாதகமாக இருக்க பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சுகபோக பாக்கியங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் எப்பொழுதும் இவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் புத்திசாலித்தனமும், ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெருமாளையும், காளியையும் வணங்கி வந்தால் இவர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை- : காமதேனு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பரிகார...
கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி - கன்னி :...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
puzzles

Puzzles with Answers | Puthirgal | Brain teasers

புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.