மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத காரியங்களை சாதுர்யமாக முடித்து காட்டுவார்கள்.

மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

இவர்கள் கௌரவம் பார்க்க வேண்டிய இடங்களில் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை அவர்களின் முகத்தை வைத்தே அறிந்து கொள்வார்கள். இவர்கள் சூழ்நிலைக் ஏற்றார்போல நடந்து கொள்வார்கள். கலை ஆர்வமும், சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனஉறுதியும், தெளிவான பார்வையும் கொண்டவர்களாதலால் இயற்கையாகவே மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

இவர்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் நெருங்கி பழகுவர். இவர்களுக்கு நெருக்கமானவர்கள் எதை சொன்னாலும், செய்தாலும் தாங்கிக் கொள்வர். குடும்ப விவகாரங்களில் இவர்களுக்கு ஒரு பிடிப்பு இருக்காது. விரக்தியான மனோபாவமும், தியாக உணர்ச்சியும் இவர்களுடைய இயற்கையான சுபாவங்களாகும்.

இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உயர்ந்த அந்தஸ்து, சேவை, தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை வேண்டாம் என  புறக்கணித்து அதிலிருந்து வெளியேறுவார்கள். சொல் ஒன்று, செயல் ஒன்று என்பது இவர்களிடம் அறவே இருக்காது. இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடலாம். இவருடைய திட்டங்களுக்கும், செயல்களுக்கும் தடை விதிக்க எவராலும் இயலாது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். குறிக்கோளுடன் செயல்படுவதில் வல்லவர்கள்.

இவர்கள் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். இவர்களிடம் மன உறுதி அதிகம் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. சிலசமயம் மனதில் சந்தேக எண்ணங்கள், சஞ்சலங்கள் உருவானாலும் அதிலிருந்து விடுபட்டு தைரியமாக காரியத்தை சாதித்து கொள்வார்கள்.

எந்த வேலை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியத்தை செய்யக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள், மற்றும் உறவினர்களை பெற்றிருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிவிடுவதால் இவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் இருக்காது.

இவர்களுக்கு பெரிய பதவிகள், தலைமைப் பொறுப்புகள் தானாக வந்தடையும். சுக்கிரன் இவர்களுக்கு யோகமாக அமைந்துவிட்டால் லட்சுமி யோகம் உண்டு. புதனும், செவ்வாயும் சாதகமாக இருக்க பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சுகபோக பாக்கியங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் எப்பொழுதும் இவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் புத்திசாலித்தனமும், ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெருமாளையும், காளியையும் வணங்கி வந்தால் இவர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும்...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...
சுவையான மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க...
கேழ்வரகு சேமியா இட்லி

கேழ்வரகு சேமியா இட்லி செய்முறை

கேழ்வரகு சேமியா இட்லி கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற  பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.