Home Tags வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை

Tag: வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

avoidable food in the morning

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள் முழுவதும் ஆற்றலையும், புத்துணர்ச்சியையும்  அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்இரவு உணவிற்கு பின் நீண்ட நேரம் கழித்து தான் நாம் காலை உணவை சாப்பிடுகிறோம். எனவே அந்த உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியமாகும்.

காலை நேர உணவில் அதிக காரம், மசாலா இல்லாத உணவாக இருந்தால் மிகவும் நல்லது. அதிக காரமான உணவு  இரைப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் செரிமான கோளாறு ஏற்படும்.  நட்ஸ் – பாதாம்  போன்ற உலர் கொட்டைகளை இரவு முழுவதும்  ஊறவைத்து காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

avoidable food in the morning காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • காலையில் எழுந்தவுடன் டீ , காபி அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை அருந்துவதால் உடலுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை. இதற்கு பதிலாக இளம் சூடான நீரை அருந்தாலம். இது உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது.
  • பொதுவாகவே புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அதை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரைப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாக அமைந்துவிடும்.
  • காலையில் இனிப்பான பண்டங்களை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது. இனிப்பு சாப்பிடுவதால்  உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து  நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
  • தயிர் காலை வேளைகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். தயிர் ஆரோக்கியமான உணவு தான், ஆனால் காலையில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். அளவாக சாப்பிடுவது நல்லதுதான். குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
  • தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால் வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
  • காலையில் ஐஸ் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது உடலின் சுறுசுறுப்பை குறைத்து மந்தத்தன்மையை ஏற்படுத்தி விடும்.
  • வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவது எப்போதும் நல்லதல்ல, காலையில் சாப்பிடுவதால் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்த கூடியது.

வெறும் வயிற்றில் எந்த உணவை சாப்பிடுவது நல்லது

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள் 

உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை தரக்கூடியது காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான். காலை உணவை தவிர்ப்பது மிகவும் தவறானதாகும்.

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை காலையில் நாம் சாப்பிடக்கூடிய உணவு தான் அந்த நாள் முழுவதும் நமக்கு சக்தியை அளிக்கிறது. இரவு உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் கழித்து தான் நாம் காலை உணவை சாப்பிடுகிறோம். கிட்டத்தட்ட பத்து மணி நேரத் திற்குப் பிறகு தான் காலை உணவை சாப்பிடுகிறோம். எனவே காலை உணவை கண்டிப்பாக நம் தவிர்க்க கூடாது.

காலையில் நாம் சாப்பிடும் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அமிலச் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை காலையில் அறவே தவிர்த்து விட வேண்டும். காலையில் நம் உடலுக்கு சக்தி அளிக்க கூடிய சிறந்த உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

காலையில் சாப்பிட சிறந்த உணவுகள்

முட்டை

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவுகளில் முட்டை சிறந்தது. இதில் புரதச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளன. மெட்டபாலிசம் அதிகரித்து  ஆற்றலைத் தரும் உணவுகளில் முட்டையும் ஒன்று.

வெந்நீர்

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கல் சீராகும்.

பப்பாளி

பப்பாளி பழம் காலையில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.  இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கெட்ட கொழுப்பை குறைத்து பல்வேறு இதய நோய்களைத் தடுக்கவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கவும் உதவி செய்கிறது.

தேங்காய் பால்

வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடிப்பது உடலுக்கு நல்லது. வெறும் வயிற்றில் தேங்காய் பால் அருந்தி வர வயிற்றில் உள்ள புண்கள் விரைவில் ஆறும்.

தர்பூசணி

தர்பூசணிதர்பூசணி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது எலக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது. நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஒரு பழமாகும்.

தேன்

தேன்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது.

இஞ்சி

இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

நீராகாரம்

காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

முளைகட்டிய பயறு

முளைகட்டிய பயறில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

ஓட்ஸ்

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடலாம். இது வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. கரையக்கூடிய நார் சத்துகள் இருப்பதால் கொழுப்பு குறைவதுடன், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய்யை ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து வந்தால் பல உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆயில் புல்லிங் என அழைக்கப்படும் இந்த பயிற்சி தற்போது மிகப் பிரபலமாக உள்ளது.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

நாம் சாப்பிடுவது சத்தான உணவே ஆனாலும் அதை சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடமால் நேரம் தவறி சாப்பிடுதாலும், வெறும் வயிற்றில் சில உணவுகளை நாம் உட்கொள்வதாலும் நம் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

சோடா

சோடா

வெறும் வயிற்றில் சோடாவை குடிப்பது மிகவும் தவறான ஒன்றாகும். சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து  குமட்டல், வயிற்றில் எரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெறும் வயிற்றில் சோடாவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

தக்காளிதக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காரணம் தக்காளியில் சுரக்கும் ஆசிட் தான். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். இதனால் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

மாத்திரைமாத்திரைகள்

மாத்திரைகளை நாம் எப்போதுமே வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு வயிற்று அமிலத்துடன் கலந்து  உடலில் தேவையில்லாத புண்களை ஏற்படுத்தி விடும்.

 

சிட்ரஸ் பழங்கள்சிட்ரஸ் பழங்கள்

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ்  பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக பயன்படுகிறது. இவைகளை நாம் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஒருவித வயிற்று எரிச்சல் உருவாகலாம். வெறும் வயிற்றில் ஜீரணிக்க எந்த உணவும் இல்லாத போது இந்த பழங்களை உட்கொள்ளும் போது இவை உணவு குழாயை விரிவு படுத்துகின்றன. இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படுத்துகின்றன.

 

ஆல்கஹால்ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்  அதில் உள்ள சேர்மங்கள்  வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால் வயிறு, குடல் ஆகியவை அமிலத்தால் அரிக்கப்பட்டு மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

குளிர்பானங்கள்குளிர்பானங்கள்

கார்பனேற்றப்பட்டு பல நிறங்களில் நிரமூட்டிகளை சேர்த்து பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. அதை காலையில் அருந்தும்போது உடலுக்கு பல்வேறு தீங்குகளை கொடுக்கும். புற்று நோய் வருவதற்கும் இவை காரணியாக இருக்கலாம். இதய நோய் மற்றும் பல விதமான உடல் உபாதைகளும் இவற்றால் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் வெறும் வயிற்றில் இத்தகைய பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள்காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

வறட்சியான உணவுகள்வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகள் என்றால் பலகாரங்கள் , மிக்சர் , நொறுக்கு தீனி, கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் போன்றவகைளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் உடலுக்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காபி, டீகாபி, டீ

காபி, டீ இரண்டுமே  மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். இதனால் மலச்சிக்கல் , வாந்தி போன்றவை ஏற்படும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி, டீ  குடிக்கும் பழக்கத்தைக் மேற்க்கொள்ளுங்கள்.

தயிர்தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து  வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்வாழைப்பழம்வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால்  மக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிகிழங்குசர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

மேலே குறிப்பிட்டவற்றை சாப்பிடாமல் தவிர்த்து காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் தண்ணீர் அருந்தி விட்டு அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிடுவது சிறந்தது.