வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து நெய் சூடானதும் அதில் முந்திரி , திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
¼ கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்.
வறுத்த முந்திரி , திராட்சை , ஏலக்காய் தூள் , சிறிதளவு நெய் தேவைபட்டால் சிறிதளவு மிதமான சூட்டில் இருக்கும் பால் சேர்த்து உருண்டைகளாக பிடித்து சிறிது நேரம் உலர வைத்து சாப்பிட்டால் சுவையான ரவா லட்டு தாயார்.