பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால்

கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம் காணும் கனவில் வரும் பூச்சிகளை பொருத்து பலன்களும் மாறும். என்ன வகையான பூச்சிகள் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பது பற்றிப் விரிவாக பார்ப்போம்.

கனவில் பூச்சிகளை கண்டால்

1. எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று அர்த்தம்.
2. சிலந்தி கனவில் வந்தால் பொருள் வரவுக்கு அதிகரிக்கும் என்று அர்த்தம்.
3. சிலந்தி கூட்டை கலைப்பது போல கனவு வந்தால் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
4. கரப்பான்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
5. அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள்.
6. அட்டைப்பூச்சி கனவில் வந்தால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
7. ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகை அதிகரிக்கும் என்று அர்த்தம்.
8. ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று அர்த்தம்.
9. தேனீக்கள் தேன் கொண்டு வருவது போலவும், கூட்டை கட்டுவது போலவும் கனவு கண்டால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்று அர்த்தம்.
10. தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பொருள்.
11. தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.
12. வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்று பொருள்.
13. பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்று அர்த்தம்.
14. பட்டாம்பூச்சி வீட்டை விட்டு வெளியே செல்வது போல கனவு கண்டால் பண பற்றாக்குறை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
15. வெட்டுக்கிளியை கனவில் கண்டால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
16. பச்சை வெட்டுக்கிளி வயலில் இருப்பது போல கனவில் கண்பது நன்மை நடைபெற போவதன் அறிகுறியாகும்.
17. பூரான் கனவில் வந்தால் எதிர்பாராத பொருள் வரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
riddles in tamil

Most intelligent Puthirgal | Puzzles with Answers | Brain games

மூளைக்கு வேலை தரக்கூடிய கேள்விகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம்...
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
carrot halwa recipe

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரிப் பருப்பு 6.உலர்ந்த திராட்சை நெய் செய்முறை காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். ...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.